பக்கம்:செங்கரும்பு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 பெருவேள்வி மிகச் சிறப்பாக நடைபெற்றது. அடுத்தநாளே வடநாட்டு மன்னர்களை அவர்களுடைய ஊர்களுக்குப் ப்ோகும்படி அனுப்பினன். தன் அமைச்சனைக் கொண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வித்தான். சிறைக் கோட்டங்களைத் திறந்து குற்றவாளிகளை விடுதலை செய்யுங்கள். வரிகளை வாங்காமல் விட்டுவிடுங்கள்' என்று ஏவின்ை. அப்பால் கண்ணகிக்குக் கோயில் கட்டுவிக்கத் தொடங்கினன். அதற்குரிய விதிகளை அறிந்த பெரிய வர்களையும் கலைஞர்களையும் வருவித்தான். கோயிலை அழகாகச் சமைத்தான். கோயில் மிகச் சிறப்பான முறையில் கட்டி நிறை வேறியது. இனி அங்கே கண்ணகியின் படிமத்தை நிறுவிக் கடவுள் மங்கலம் செய்யவேண்டும். அதற்குரிய காரியங்களைக் குறைவறச் செய்யும்படி ஏவிஞன் மன்னன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/83&oldid=840823" இலிருந்து மீள்விக்கப்பட்டது