பக்கம்:செங்கரும்பு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 என்றும் இல்லாத மனநிறைவு உண்டாயிற்று. இடையே சில முறை சாத்தனர் வந்து சென்ருர். "காவியம் முடிந்த,பிறகு வந்து வழக்கம் போல் சில நாள் தங்குகிறேன்” என்று சொல்லி அவர் போய் விட்டார். - சிலப்பதிகாரத்தை இயற்றும் வாய்ப்புத் தமக்குக் கிடைக்கவில்லையே என்று சாத்தனுர் முதலில் எண்ணி ஞர். பிறகு மாதவியின் மகளாகிய மணிமேகலையின் வரலாற்றை இயற்றத் தொடங்கினர். அதனல் அடிக்கடி வஞ்சிமாநகர் வருவதற்கு அவரால் இயல வில்லை. அவர் மணிமேகலை என்னும் காவியத்தை எழுதி முடித்துவிட்டார். ‘எப்படியாவது ஒரு. காவியம் செய்துவிட வேண்டும் என்ற வீறு அவ. ருக்கு இருந்தது. அதனுல் அதை முழுமூச்சாக இருந்து முடித்தார். இளங்கோவடிகள் சிந்தனை செய்து செய்து மெரு கேற்றிக் காவியத்தை நிறைவேற்றினர். சாத்தனர் மதுரையிலிருந்து வந்தார். அவர் தாம் இயற்றி முடித்திருந்த மணிமேகலை என்னும் காவியத்தைக் கொண்டுவந்திருந்தார். அவர் இளங்கோவடிகளிடம் வந்தார். அடிகள், ' இரண்டு நாட்களுக்கு முன்தான் சிலப்பதிகாரத்தை இயற்றி முடித்தேன். உங்களுக் குச் சொல்லியனுப்பவேண்டும் என்று நினைத்தேன். நீங்களே வந்து விட்டீர்கள்!' என்று மகிழ்ச்சியுடன் கூறி, அவரை வரவேற்ருர், - அப்போதுதான் சாத்தனர், ' நானும் ஒரு காவியம் செய்திருக்கிறேன். மணிமேகலையின் கதை யைச் சொல்வது அது' என்று சொன்னர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/91&oldid=840832" இலிருந்து மீள்விக்கப்பட்டது