பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்

31



XXXVII. இதழாராய்ச்சி

தமிழ்த் தொடர்புடையனவாய் கடந்த காலத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ள இதழ்கள் பாதுகாத்து ஆராயப் பெறவேண்டும். சிறப்பாக (1) அச்சுக்கலை வரலாறு (2) இதழ்களால் மொழியும் இலக்கியமும் பெற்ற வளர்ச்சி (3) மொழி-நாடு பற்றிய சிறப்புடைய செய்திகள் என்ற தலைப்பில் ஆராய்ச்சி நடைபெற வேண்டும். இந்த ஆராய்ச்சிக்கு என்று தனி நிறுவனம் தோன்ற வேண்டும்.

XXXVIII. படத்தாெகுப்பு

தமிழ் நாட்டின் பல்வேறு ஊர்களையும் காட்சிகளையும் விளக்கும் அழகிய படங்கள் பல அரசாங்க மாளிகைகளிலும் ஆங்கில அறிஞர் களின் வரலாற்று நூல்களிலும் காட்சி அளிக்கின்றன. அவை யாவும் தொகுக்கப் பெற்று விளக்கக் குறிப்புக்களுடன் தனி நூலாக வெளியிடப் பெறவேண்டும்.

XXXIX. நாடும் ஊரும்

நம் தாயகமும் தாயகத்து ஊர்களும் தமிழ் மணங் கமழும் பேர்களுடன் திகழ வேண்டும்.