பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் i 17 யதையும், மண்ணியாற்றங்கரையில் மணவால் இலிங்கம் அமைத்துப் பால் முழுக்கு ஆட்டியதையும், சண்டீசன் என்னும் பதவி பெற்றதையும், இறைவர் அவர்க்கு மாலே சூட்டியதையும் சம்பந்தரது மூன்று திரு முறைகளின் மூலம் உணர்கிருேம். பீரடைந்த பாலதாட்டப் பேணுதவன் தாதை வேரடைந்து பாய்ந்ததாளே வேர்த்தடிந்தான் தனக்கு தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே என்றும், தோத்திரமா மனவிலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின்பால் பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி என்றும், எண்திசையார் மகிழஎழில் மாலையும்போ னகமும் பண்டு சண்டி தொழி அளித்தான் என்றும், வந்தமண லாலிலிங்கம் மண்ணியின்கண் பாலாட்டும் சிந்தைசெய்வோன் தன்கருமம் தேர்ந்துசிதைப் பான்வருமத் தந்தைதனைச் சாடுதலும் சண்டீசன் என்றருளிக் கொந்தனவும் மலர்கொடுத்தான் கோளிலிஎம் பெருமானே. என்றும் வருதல் காண்க. கண்ணப்பரைப்பற்றிக் கழறுகையில், காணலேக்கும் அவன்கண் இடந்தப்பநீள் வானலைக்குந் தேவு வைத்தான் என்றும்,