பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 159 இறைவன் சோதி வடிவினன் என்பதைச் சைவ நூல் களில் எங்கும் காணலாம். 'ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ்சோதி' என்பர் மணிமொழியார் "சீர் ஒளிய தழற் பிழம்பாய் நின்ற திகழ் ஒளியை” என்பர் அப்பர், எனவே, அவர் அருஞ்சோதி இறைவர் சிவசத்தியுடன் சேர்ந்து காரியம் புரிதலையும். அருளே சத்தி என்பதையும் சிவஞான சித்தியார் அழகுற, அருளது சத்தி யாகும் அரன் தனக் கருளே இன்றித் தெருள் சிவம் இல்லை அந்தச் சிவம்இன்றிச் சத்தி இல்லை மருளினே அருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் கண்கட்கு இருளினை ஒளியால் ஒட்டும் இர்வியைப் போல ஈசன் என்கிறது. இதனுல் அவன் அருளே அவாம் காரி எனப் பட்டான். இன்ஞேரன்ன பொருட்செறிவினை அடக்கியே 'ஐந்ததி காரி *** அருளே அவாம் ஆங்கரி” எனச் சிவபெருமானைத் திரு பிள்ளை அவர்கள் குறித்தனர். கணம் புல்லர் 'தங்கள் பிரான் திருவுள்ளம் செய்து தலைத் திருவிளக்குப் பொங்கிய அன்புடன் எரித்த பொருவில் திருத்தொண்டர் ஆதலினலும், காரி நாயனர் மன்னர் பால் பெற்ற நிதிக் குவைகொண்டு சங்கரளுர் இனிதமரும் தானங்கள் பல சமைத்துச் சீர் அடியார் எல்லார்க்கும் மேவுற்ற இருநிதியம் மிக அளித்தும் வந்தமையாலும், நெடு மாறர் திருநீற்றின் நெறி விளங்க அரசு புரிந்தமையாலும், வாயிலார், மறவாமையால் அமைத்த மனக்கோவில் உள் இருத்தி, உறவாதிதனை உணரும் ஒளிவிளக்குச் சுடர் ஏற்றி, இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம்ஆட்டி, அறவாணர்க் கன்பென்னும், அமுத ைமத்து அர்ச்சனை செய்தமையாலும், முனியடுவார் தாம் பெற்ற நிதியெல்லாம் ஈசன் அடியார்கள், சொன்ன சொன்னபடி நிரம்பக் கொடுத்துத் துாய போனகமும் கன்னல் நறுநெய் கறி தயிர் பால் கனியுள் உறுத்த கலந்தளித்துமன்னும் அன்பின் நெறி பிறழா வழித் தொண்டாற்றி வந்தமையாலும் இறைவர் விரும்பும்