பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 195 அதாவது இறந்தார். "இதனே புரவலர் மன்றுள் ஆடும் பூங்கழல் சிந்தை செய்தார்” என்கிருர். சிறுத்தொண்டர் தம் அருமை மகனே அறுக்கின்ருர், அந்த நிகழ்ச்சியில் இருவர் மனமும் பேர் உவகை எய்தி 'அரியவினை செய்வார்' 'என்று சேக்கிழார் கூறியுள்ளனர். இத் தொடர் அரிதலாகிய செயல் என்பதோடு, செயற்கரிய செயல் என்று பொருள் தருதலையும் காண்க. திருநீலகண்டர் மாதர்களின் இச்சையுள் ஈடுபட்டிருந் ததைக் குறிப்பிடுகையில் 'இளமை மீதுர இன்பத் துறையில் எளியர் ஆளுர்' என்றும், காரைக்கால் அம்மையார் மனப் பருவம் உற்றதைக் குறிப்பிடுகையில் 'இல் இகவாப்பருவம்' என்றும் பாடினர். இன்னுேரன்ன காரணங்களால் இவரது. வாய் தூய்மை உடையது என்று அறிதலின், திரு பிள்ளே அவர்கள் துரவாய் மலர்ந்த என்று கூறியருளினர். திருவள்ளுவர் 'வாய்ச்சொல்” என்று கூறியுள்ள தொடர்க்குப் பரிமேலழகர் பொருள் விளக்கம் கண்ட விடத்து, வாய் என வேண்டாது கூறிஞர், தீய சொல் பயிலா என்பது அறிவித்தற்கு' என்றனர். பரிதியார் 'உபதேசத்தோடு கூடிய நல்லோர் சொல் ஆபத்துக் காலத் துக்கு வைத்த உடைமை போல் உதவும், என்றவாறு' என்று விளக்கினர், "துறந்தாரின் தூய்மை உடையார்' என்ற தெர்டர்க்கு விளக்கம் தரும்போது. தூய்மை என்பதற்கு "மனம் மாசு இன்மை” என்ற விளக்கம் தந்தனர் காளிங்கர். அதாவது 'மனம் வாக்குக் கருமம் என்னும் மூன்றிலுைம் தூய்மை” என்பது. அகம் தூய்மை என்னும் தொடர்க்குப் பரிமேலழகர் கண்ட பொருள் மெய்யுணர்தல்” என்பது, இவ்வாறு பேரறிஞர் கண்ட தூய்மைகளையுடையது சேக்கிழார் வாக்கு ஆதலின் 'துரவாய்” என்றனர் என்று கூறினாலும் அமையும். வானவன் எனச் சேக்கிழாரை ஈண்டே சுட்டியதன் கருத்துத் தேவேந்திரனுக்குக் கீழ்ப்பட்ட தேவர்கள் என்ற