பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 செங்கீரைப் பருவம் என்று அடைமொழி அமைத்துப் பாடியருளினர். இந்த அடைமொழியன்ருே இராமலிங்க வள்ளலாரையும், தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய் ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே என்று குறிப்பிடச் செய்தது? சேக்கிழார் மொழிகளில் பொருட் சிறப்புப் பொருந்தி யிருக்கும். சுந்தரர் வரலாற்றில் இறைவர் வன்தொண்ட ரோடு வாதம் இட்டுத் தம் கோட்பாட்டை நிலை நிறுத்து கையில், நம்பி ஆரூரர் கிழவடிவில் இருந்த இறைவரை நோக்கி, 'பழைய மன்ருடி போலும்!” என்று குறிப்பிடும் சொற்ருெடரின் பொருள் சிறப்பை என்னென்று கூறுவது! வெளிப்படையாகப் பார்க்கும்போது தொன்று தொட்டு விளங்கும் பொற்சபையின் கண்ணே நடனமாடும் கூத்தரசன் போலும் என்ற பொருளுடன், நீதி மன்றங்கள் பல கண்டு அங்கெல்லாம் வழக்காடி வென்று கைவந்த பழைய ஆள் போலும் என்ற சிறப்புப் பொருளும் அன்ருே ஈண்டுத் தொனிக்கிறது? திருநீலகண்டரது குலத்தைக் குறிக்குங்கால், அவரைக் குலாலனர் குலத்தினர் என்ருே, குயவர் குலத் தினர் என்ருே மண்வினைஞர் என்ருே குறிப்பிடாமல் வேண்டுமென்றே, "வேட் கோவர் குலத்துவந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். வேட் கோவர் குலம் என்பது குயவர் குலமே. வேளாகிய மண்ணே வெட்டிக் கொணர்ந்து காலால் மிதித்து, பலகை கொண்டு தட்டிப் பணி புரியும் செயல்களைக் காணும்போது, மண்ணிடத்து அவர்கள் கோபங்கொண்டு இத்தகைய செயல்களைச் செய்கின்றனரோ என்று ஒரு சிலர் நினைக்கும் நினைவினே உணர்ந்தே குலாலரை வேட்கோவர் என்று குறிப்பிட்டார். இத்தொடர் சேக்கிழார் தம் நுண் ணறிவால் படைத்துக்கொண்ட ஒன்று. இங்ங்னம் ஏன் படைத்து மொழிந்தார் என்பதை நாம் சிந்திக்கும்போது தான், அவர் அங்ங்ணம் படைத்து மொழிந்த கருத்து நமக்குப் புலனாகிறது. அதாவது வேள் என்னும் சொல்லுக்கு மண் என்னும் பொருள் இருப்பது போலவே, மன்மதன் என்ற