பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலப் பருவம் 29? இன்ஞேரன்ன காரணங்களால் 'துங்கம் மிகுந்த அருந் தவம்' என்று தவம் சிறப்பிக்கப்பட்டது. இத்தகைய தவக் கோலம் பூண்டவர் திரண துரமாக்கினி. அவர் வாக்காகிய தொல்காப்பியமாம் தொன்மை நூல், எவராலும் அசைக்க ஒண்ணு அரும்பெருங் கருத்துக்களையும், இலக்கண நுட்பங் களையும் கொண்டுள்ளது. இதனை அவர் அவர்கள் அந்நூலைக் கொண்டு படித்தால் நன்கு உணர்வர். இத்தகைய நூலை எவரும் எத்தகைய குற்றமும் காணுத நிலையில் திரனது மாக்கினி பாடிய காரணத்தால், 'தோலா நாத் திரண துரமாக்கினி' எனப்பட்டார். இதனை ஒர் எடுத்துக் காட் டால் மட்டும் எடுத்துக் காட்டி, மேலே செல்வோமாக. நன்னூல் ஆசிரியர் பல்கலைக்குரிசில் பவணந்தியார், உயர் திணைக் குரியார் யாவர்? அஃறிணைக்குரியார் யாவர் என் பதைக் குறிப்பிடுகையில், மக்கள், தேவர் நரகர் உயர்தினை

  • գր: - Ꭾs fazᎦyz:,• - 3. தி இன’’ மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை

என்றனர். ஒல்காப்பெருமை வாய்ந்த தொல்காப்பியர், இவ்விரு திணைகளைக் குறிப்பிடும்போது, உயர்திணை என்மஞர் மக்கட் சுட்டே அஃறிணை என்பர்ை அவரல பிறவே - ஆயிரு திணையின் இசைக்குமன் சொல்லே என்றனர். இவ்விருபெரும் ஆசிரியர்கள் அவ்வத்திணைக்குரியவர் களைக் குறிப்பிடும் நிலைகள் செவ்வனே வேறுபடுத்திக் கூறப் பட்டுள்ளதை நன்கு ஈண்டு நோக்குதல் வேண்டும். நரகரை யும் உயர்தினேயின் பால் படுத்தினர் பவணந்தியார். தீவினை கட்குரியவர் அல்லரோ நரகர் ? அவர்கள் எக்காரணத்தால் உயர்திணையாதல் கூடும்? வள்ளுவர் தேவர்களைப் பற்றிக் கருதியுள்ள கருத்து, கயவர் என்பதாகும். இதனே,