பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சப்பாணிப் பருவம் என்று வள்ளுவரும், மன்னன் பெரியாரது துணைக் கோடலை வற்புறுத்தி இருத்தலையும் ஈண்டுக் காண்க. தக்கார் இனத்தனுய்த் தான்ஒழுக வல்லானைச் செற்ருர் செயக்கிடந்த தில் இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர் என்று கூறிப்போந்தார். மன்னர் தாராளச் சிந்தையராய் இருத்தல் வேண்டும். இவர் தம் கொடைத் திறன் கைம்மாறு கருதா மழைபோன்று கொடுக்கும் கொடைத் திறனக இருத்தல் முக்கியமானது. 'ஈந்தே கடந்தான் இரப்போர் கடல்' என்று கம்பரும் கூறுதல் காண்க. 'தருகை நீண்ட தயரதன்' என்பது "தனியன். 'தருமத்தின் கவசத்தான்' என்று இராமாயண மும் 'பருவக் கொண்மூப்படி எனப் பாவலாக்கு உரிமையின் உதவி” என்று திருமுகப் பாசுரமும், 'காரின் மலிந்த கொடை' என்று பெரிய புராணமும் கூறுதல் காண்க. 'ஈண்டுக் கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு என்னுற்றுங் கொல்லோ உலகு' என்னும் குறள் நினைவுக்கு வரும் முறையில், 'மாறு கருதா மழைநிகர் கொடைத் திறன்” என்னும் தொடர் அமைந்திருத்தலேக் காண்க. அரசர்கள் தம் சேனேயைப் பெருக்குதலும் கடம்ை. வள்ளுவர், ' இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு ' என்று கூறியதற்கு உரை கண்ட பரிமேலழகர், வகுத்தல் என் பதற்கு விளக்கம் கூறுங்கால், 'யானை, குதிரை, படை, நாடு, அரண் என்றிவற்றிற்கும்” என்று கூறியுள்ளார். மணக்குடவர், 'யானே, குதிரை முதலிய படைக்குக் கொடுத்து அவையியற்றை உண்டாக்குதல்' என்றனர். பரிப்பெருமாள், 'யானே, குதிரை, படைக்குக் கொடுத்து