பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தப் பருவம் 487 யுள்ளார் என்று வாதாடி அதற்குச் சான்முக, 'தன்பெருஞ் செல்வமும்” என்னும் தொடரைக் காட்டி "ஈண்டுச் 'செல்வம்' என்பது புத்திரச் செல்வமே ஆகும்' என்று எடுத்துக் காட்டுவர். செல்வம் என்று புத்திரர்களைக் கூறுவது மரபே யானுலும், ஈண்டு நம்பியாண்டார் நம்பி களால் குறிப்பிடப்பட்ட பெருஞ் செல்வம் என்பது புத்திரரை அன்று. இதனை அவர் பாடிக் காட்டியுள்ள செய்யுள் போக்கைக் கொண்டே உணரலாம். 'தன்னையும் தன் துண்டமதிநுதலாளேயும்” என இணைத்துக் கூருது செல் வமும் எனப் பிரித்துச் காட்டி இருப்பதை நோக்கவும். ஆகவே, செல்வமும் என்பது ஈண்டுப் பொருட் செல்வமே அன்றிப் புத்திரச் செல்வம் அன்று. இதனை விளக்கவே பெருஞ் செல்வமும் என்று அடைகொடுத்துப் பேசினர். இன்னே ரன்ன காரணங்களால் நம்பியாண்டார் நம்பிகளின் கருத்துத் தராசுத்தட்டில் ஏறியவர்கள் அமர்நீதி நாயனரும், அவர்தம் மனைவியாருமே பொருள்களுமே என அறிதல் வேண்டும். சேக்கிழார் பெருமானுர் நம்பியாண்டார் நம்பிகள் பாடி யுள்ள செய்யுளில் காணும் பெருஞ் செல்வமும் என்னும் தொடர்க்கு ஒருசிலர் புத்திரச் செல்வம் என்று பொருள் கண்டு, மயங்கக் கூடும் என்பதை அறிந்தே தராசுத்தட்டில் ஏறியவர்கள் நாயனரும், அவர்தம் மனேவியாரும், குழந்தை யும் என்பதை ஒரு முறை மட்டும் குறிப்பிடாமல் இருமுறை யும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தம் கருத்தை வலியுறுத் தவே 'புதல்வன் தனையுடன் கொடு' என்றும் 'மைந்தரும்,' என்று பாடிக் காட்டினர். திருஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவேறுமாறு செய்தது.அவருக்கு மாசு அன்ருே என்று நம் சமயாசாரி யருக்கும் குற்றம் கற்பிப்பார் உணரும் வகையில், புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும் இகலிலர் எனினும் சைவர் இருந்துவாழ் மடத்தில் தீங்கு தகலிலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடா திருந்த வேலை