பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தப் பருவம் 439 'ஆகவே சேக்கிழார்' விலக்கு விலகக் கவிபாடவல்லவர் என்பது தேற்றம். விதிகளைத் தழுவிப் பாடிய கவிகள் பெரிய புராணத்தில் பலவுண்டு: திருமணத்திற்குமுன் பலவிதிகளை மேற் கொள்ளுதல் மரபாகும். இதனைத் தடுத்தாட்கொண்ட புராணத்தும் காணலாம். "குலமுதல் அறிவில் மிக்கோர் கோத்திர முறையும் தேர்ந்து' என்பதும், 'குறித்து நாள் ஒலைவிட்டார்” என்பதும், நீள் முளை சாத்தினர்கள்” என் பதும், 'பணைமுரசு இயம்ப வாழ்த்திப் பைம்பொன் நாண் காப்புச் சேர்த்தார்' என்பதும், மற்றும் பல செய்திகளும் பாடப் பட்டு இருத்தல் 'விதிதழுவி' பாடப்பட்டமைக்கு ஏற்ற சான்ருகும். விதிதழுவிப் பாடவல்லவர் என்பதைத் தாமே 'மாமறை விதிவழாமல் மணத் துறைக் கடன்கள் ஆற்றி' என்று கூறு மாற்ருலும் தெளியலாம். சேக்கிழார் பெருமாளுர் பெரியபுராணம் பாட மூல இலக்கியங்களாக உள்ளவை, திருமுறைகள். இந்தத் திரு முறைகளில் காணும் கருத்துக்களுக்கு முரணுகாதவாறு கவிபாகும் திறமை சேக்கிழார் பெற்றுள்ளார். சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில் திருநீலகண்டரைப் பாடும்போது, 'திருநீலகண்டத்துக் குயவனர்க்கு அடியேன்” என்று குலத்தைக் குறிப்பிட்டுச் சொன்னதற்கு இணங்கச் சேக்கிழார் வேட்கோவர் குலத்துவந்தார்’ என்றும், சுந்தரர் 'வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடி யேன்” என்பதற்கு விளக்கம் கூறுபவர்போல், "மெய்த் தவ வேடமே மெய்ப் பொருளெனத் தொழுது வென்முர்' என்றும், காரைக்கால் அம்மையார் தமது அற்புதத் திருவந் தாதியில், பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீ துறினும் உருதொழியு மேனும் - சிறிதுணர்த்தி மற்ருெருகண் நெற்றிமேல் வைத்தான்தன் பேயாய நற்கணத்தில் ஒன்ருய நாம் என்று பாடியிருப்பதை அறிந்து,