பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தப் பருவம் 451 கின்றன. 'மிகு சைவத்துறை விளங்க' என்று பாடுதலாலும், அருகனைத் தெய்வமாகத் தம் வாயில்ை கூறுதற்கும் விரும் பாராய் அமணர்கள் தம் பொய்கொள் விமானம்' என்றும் சைவ சமயம்,மேம்பாட்டையும் சிவனடியார்களின் சிறப்பை யும் கூறுமிடத்து, அருட்பெருகு தனிக்கடலும் உலகுக் கெல்லாம் அன்புசெறி கடலுமாம் எனவும் ஒங்கும் பொருட்சமயம் முதற்சைவ நெறிதான் பெற்ற புண்ணியக்கண் இரண்டெனவிப் புவனம்.உய்ய இருட்கடுவுண் டவரருளும் அகில மெல்லாம் ஈன்முள்தன் திருவருளும் எனவும் கூடித் தெருட்கலைஞா னக்கன்றும் அரசும் சென்று செஞ்சடைவா னவர்கோயில் சேர்ந்தார் அன்றே என்று பாடித் தம் அடியார் பக்தியையும் காட்டி யுள்ளமையின் சைவப் பெருவாழ்வு ஆயினர். நீடு சைவ சமயம், எல்லாச் சமயக் கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டு துலங்குகின்றமையின் நீடும் சைவம் என்றனர் மேலும், வடஅமெரிக்காவில் கோலறடோ என்னும் ஆற்றின் அருகே உள்ள ஒரு சிறு குன்றின்மீது சிவன் கோயில் என்ற ஒர் இடம் இருக்கிறது. இவ்விடம் பல்லாயிரம் ஆண்டுக்கு முற் பட்டது என்பர் ஆய்வாளர். In the wild mountainious State of Colorado seventh largest in America scientist of the W. S. Musem of Natural History three months ago announced discovery of a Lost World. The focal point was Shiva’s grant Temple a half square mile of solid rock plateau isolated from the main land by 9000 ft. Canyons eroded by rivers some 200000 years ago. —London news review 23-9-1937 ஆசியா கண்டத்து வழிபாட்டிலும் சைவ வணக்கக் குறிப்புக் காணப்படுகிறது. அவர்கள் கடவுள் இடபத்தில்