பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் பிள்ளைத்தமிழ்ப் பாடல் களில் அமைந்த கருத்துச் சுருக்கம் பாயிரம் விநாயகக் கடவுள் வணக்கம் : விநாயகர் விசுவரூபம் எடுத்தது; அதுபோது சந்திரன் விளங்கிய நிலை; நடராசப் பெருமான் உலகெலாம் என்னும் தொடரைச் சேக்கிழார்க்கு உணர்த்தியது. "மலர் சிலம்படி” என்னும் தொடரின் உண்மைப் பொருள்; நால்நெறி (சரியை கிரியை, யோகம், ஞானம், சத்புத்திர தாச சக ஞான மார்க்கங்கள்.) பக்கம் 1-9 குருவணக்கமும் அவை அடக்கமும்: திருக்கயிலாய பரம்பரைக் குறிப்பு. சேக்கிழார், உமாபதி சிவம், சுப்பிர மணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள், சிவபெருமான், கணபதி, முருகன் இவர்கட்கு ஒப்பாதல், குருவின் பாண்பு; அவையடக்க விளக்கம். பக்கம் 10-22 1. காப்புப் பருவம் செய்யுள் 1. திருவாரூர்த்தியாகர் சுந்தரருக்கு அடி எடுத்துக் கொடுத்தல்; தில்லைவாழ் அந்தணர் முதல் ஏழு அடியார்களின் வாழ்க்கைச் சுருக்கம். உலகெலாம் எனும் தொடரை முதல் இடை, கடையில் அமைத்திருத்தல். சைவ பரிபாஷை, சம்பிரதாயம், காப்புப்பருவ விளக்கம். பக்கம் 23-35 செ. 2. ஏழு முனிவர், ஏழு குதிரை. எறிபத்தர் முத லான எழுவர் வரலாற்றுச் சுருக்கம், சேக்கிழாரின்