பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரானைப் பருவம் 491 மொய்பணிகூர் குளிர்வாடை முழுதுலவும் பொழுதேயாய்க் கொய்தளிர்மென் சோலைகளும் குலைந்தசையக் குளிர்க்கொதுங்கி வெய்யவனும் கரம் திமிர்க்க மாட்டான்போல் விசிம்பினிடை ஐதுவெயில் விரிப்பதுவும் 哆 அடங்குவதும ஆகுமால என்று பாடியுள்ளார். இந்நிலையில் பணியின் கொடுமை யிருக்குமானல் எவர்தாம் அதனே உவப்பர். ஆகவே, ஈண்டு 'மதியும் பணியும் உவவா’ என்று ஒதினர். ஆளுல், எவரும் உள்ளம் உருகு வார் மதியினையும் (அறிவினை) அவர் தம் ஆனந்தக் கண்ணிரையும் உவப்பர். அப்பர் பெருமான வணங்கும் வணக்கப் பாடவில் சிவஞான முனிவர், இடையருப் பேரன்பும் மழைவாரும் இணைவிழியும் உழவாரத்தின் படையருத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சும் நடையருப் பெருந்துறவும் வாகீசப் பெருந்தகைதன் ஞானப்பாடல் தொடையருச் செவ்வாயும் சிவவேடப் பொலிவழகும் துதித்து வாழ்வாம் என்று துதித்து வணங்கினர். இதனுல் நெக்கு உருகுவார் மதியும், அத்தகையார்கன் பணியும் உவத்தல் செய்ய என்பது உண்மை ஆதலைக் காணவும். தாமரை மலர் செம்மை நிறமும் மணமும் உடைமை யோடு, வண்டுகள் மொய்க்கப் பெறும் தன்மையையுமுடை யது. இதுவே ஈண்டு உணர்த்தப்பட்டது. ஈண்டுக் கோகனம் இரண்டு என்றது சேக்கிழார் பெருமானரது திருவடிகளே প্ত নিৰ্ম জ্য,