பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரானைப் பருவம் 509 சத்தியாய்ப் புவன போகம் தனுகர ணமும் உயிர்க்காய் வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யும் அன்றே என்கிறது. கருமமலமாவது உயிர்கள் எடுத்த தேகத்திற்கு முன் னிலைக் காரணமானது; பல புசிப்புக் களை உண்டாக்குவது: பிறப்பு இறப்புக்களைத் தோற்றுவிப்பது; ஆன்மாக்கள் தோறும் சென்று பொருந்துவது; மனமொழி மெய்களால் செய்யப்படுவனவற்றிற் குரிமையுடையது; பு: ண் ணி ய பாவங்கட்குக் காரணமானது; சம்ஹார காலத்தில் மாயா காரணத்திலே சென்று படிவது; மாயையோடு கூடிக் காரியப்படுவது, அரூபமாய் இருப்பது சடமாய் உள்ளது. கன்மலமாகிய இஃது உயிர்களிடத்தில் காணப்படும் பல் வேறு இன்ப துன்பங்கட்கும் பிறவி மாற்றத்திற்கும் காரணம் என்று அறிதல் வேண்டும். இதனேச் சிவஞான சித்தி யார், - இருவினை இன்ப துன்பத் திவ்வுயிர் பிறந்தி றந்து வருவது போவ தாகும் மன்னிய வினைப்ப யன்கள் என்று எடுத்து மொழிதல் காண்க. ஆணவமாவது செம்பில் களிம்புபோலச் சீவனைப் பற்றி அறிவு முழுமையை மறைப்பது. ஆனால், சிவபுண்ணிய மேலிட் டால் பக்குவப்படவல்லது; அதிக இருளாய் இருப்பது: ஆணவ இருள் தன்னேயும் காட்டாது; பிறபொருளை யும் காட் டாது; இருளாயினும் பிறபொருளேக் காட்டாது போயினும், தன்னையேனும் காட்டும். இது குறித்தே திருவருட்பயன் "ஒருபொருள் காட்ட திருள்; உருவம் காட்டும் இருபொருளும் காட்ட திது" என்று விளக்குகிறது. மேலும், சிவஞானசித்தியார் இம்மலத்தின் இயல்பை,