பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமாளுர் பாத்த நூல் திருத்தொண்டர் புராணமாகும். இந்நூலைப் பெரிய புராணம் என்று வழங்குவதே வழக்கத்தில் வந்துவிட்டது. இந்நூல் பல்லோரால் பலவகையில் அச்சாகி வெளிவந் துள்ளது. சேக்கிழார் மாண்பையும், பெரிய புராணத்தின் திட்ப நுட்பப் பொருட் சிறப்பையும் திரிசிரபுரம் மகா வித்துவான் மீளுட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், தம் சேக்கிழார் பிள்ளைத் தமிழ்நூலில் திறம்படப் பாடி அமைத்துள்ளனர் இத்தகைய அரிய நூலுக்கு, சைவத்திருவாளர் கயப்பாக்கம் சதாசிவ செட்டியார் அவர்கள், ஒரு குறிப்புரை எழுதியுள்ளனர். அதற்குப் பிறகு அண்மையில் விவேகானந்தர் கல்லூரிக் தமிழ்ப் பேராசிரியர் வித்துவான் C. ஜகந்நாதாச்சாரியார் M.A.I.T. அவர்களும் டிெ பிள்ளைத்தமிழ்க்குக் குறிப்புரை எழுதியுள்ளனர். இக் குறிப்புரை முன்னேய குறிப்புரை யினும் சிறிது விரிவுடையது. பெரிய புராணத்தின் பெருமையினையும் சேக்கிழாரின் சிறப்பையும் பற்றிப் பல அறிஞர்கள் உரைநடை வாயிலாக வும் உரைத்து உள்ளனர். இங்ங்னம் பற்பல பேரறிஞர்கள் பெரிய புராணத்திற் கும், சேக்கிழார் பெருமானுர்க்கும் அரிய பெரிய தொண் டினைச் செய்துள்ளனர். இந்திலையில் அடியேனுக்கும் நெடு நாளாகப் பெரிய புராணத்திற்கும் சேக்கிழார் பெரு மாளுர்க்கும் எ ன் ன ல ா ன தொண்டினைப் செய்ய வேண்டும் என்ற அவா இருந்து வந்தது. அவ்வவாவினைச் சிறிது தணித்துக்கொள்ளப் பெரிய புராணத்தைத் தழுவி 'வையம் போற்றும் வணிதையர்' என்ற பெயரில் ஒரு நூலை உரை நடையில் எழுதி வெளியிட்டுள்ளனன். இதன் கண் வெறும் வனிதையர்களின் வரலாறுகளை மட்டும் எழுதப்பெரு மல், சேக்கிழார் பெருமானரது கவிச்சிறப்பு, நயம், அவரது