பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 அம்புலிப் பருவம் தலைவனம் குழந்தையுடன் வந்து ஆடுமாறு அழைக்கும் முறையில் பாடுதலாம் என்க. அங்கனம் அழைக்கையில் சாம உபாயம், பேத உபாயம், தான உபாயம், தண்ட உபாயம் இவற்றை எல்லாம் மேற்கொண்டு அழைக்கும் முறையிலும் பாடவேண்டும் பிள்ளைத் தமிழ் பாடும் புலவன். இங்ங்னம் எல்லாம் பாடுதலில் தலைசிறந்தவர் திரு. பிள்ளை அவர்கள். இவர் குமரகுருபரரைப் போலப் பல பிள்ளைத் தமிழ் நூல்களைப் பாடிய பேரறிஞர். இதல்ை இவர் பிள்ளைத் தமிழ் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்னும் சிறப்புடன் அழைக்கவும் பட்டனர். இவர் பாடிய ஏனைய பிள்ளைத் தமிழ் நூல்களிலும், இச்சேக்கிழார் பெருமாளுர் மீது பாடப்பட்ட பிள்ளைத் தமிழில் தமது முழுத் திறனையும் திரு. பிள்ளை அவர்கள் காட்டியுள்ளனர் என்பது வெறும் புகழ்ச்சி அன்று உண்மையே ஆகும். இஃது உண்மை என்பதை இதற்கு முன் வந்த பருவங்களின் பாடல்களிலும் அவற்றின் விளக்கங்களிலும் கண்டோம். இனி இப்பரு வத்தில் அவரது தனித்திறமையினையும் காண்போமாக. இம்முதற் பாடல், சேக்கிழாரை ஒருசார் சந்திரன் ஒப்பாவன் என்ற ஒப்புமை காட்டி, அவனே அழைப்பதைத் தெரிவிக்கின்றது. ஆகவே, இதன்கண் சிலேடை அணியும் அமைந்துள்ளது. இப்பாடல் சாம உபாயம் அமைந்த பாடல் ஆகும். சந்திரன் பெருமைக்குரியவன் என்று புலவர்களால் பாடப்படும் காரணத்தால் அறியலாம். சேக்கிழார் நிலாவை 'நீற்றின் பேரொளி போன்றது நீள் நிலா ' என்றும் பாடினர் அல்லரோ? ஆதலால் புலவர்களால் பாடப்படும் மதியோனும் ஆவான். புலவர்கள் பலரும் சந்திரனைப் பாடுதலை அவ்வவர்தம் நூலில் காணலாம். அதனல் சந்திரனும் பெருமைக்குரியவன். சந்திரன் தோன்றக் கழுநீர் மலர்கள் மலரும். இக்காரணத்தால் சந்திரனைக் குவளை மலர்கட்குக் கணவன் என்றும் புலவர்கள் கூறுவர். ஆகவே, சந்திரன் குவளையை உவப்பதும், குவளைகள்