பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பருவம் 57.1 'பால்நினைந்துரட்டும் தாய்' என்றும், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் 'குழவி அழுத குரல் கேட்டுத் தாய் வந்து அ.மு. து.ாட்டும் கெழுதகை' என்றும் தெரிந்து கூறினர். அங்ங்னம் குன்றை நகர் மக்கள் தம்மை அடைந்தவர்கட்குத் தேவை தெரிந்து உதவினர் என்பதையும், வேட்டவர்க்கு வேட்ட வாறு வழங்கினர் என்பதையும் இச்சொல் அறிவிக்கின்றது. அம்மை என்பதனே அழகிய மேகம் என்ருே, நீரையுடைய மேகம் என்ருே பொருள் கொண்டு காணின், அந்நகர வாசிகள் மேகம் போலக் கைம்மாறு கருதாது உதவி புரிபவர் என்பதும் தெரியவரும். வள்ளுவர் "கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி' என்று அன்ருே கூறியுள்ளனர்? இத்தகையர் வாழும் குன்றை நகர் ஆளியுடன் ஆட வருதலால் கைம் மாறு வேண்டா உதவியைப் பெறலாம் என்ற குறிப்பும் இங்கு இருத்தலேக் காண்க. இப்பாடலும் பேத உபாயம் அமையப் பாடப்பட்டது. - (66) 6. குறையுடைய பாம்பொன் றெடுத்துண் டுமிழ்ந்திடக் குலைகுலைந் துழல்வை எங்கள் கோமான் பெருங்கல்வி ஆட்சியை உணர்த்துசெங் குருமணிச் சூட்டுமோட்டு நிறைவுகெழு துத்திப் பணுடவிப் பாம்பொன்று நேரடைய மன்றுள் நானும் நினையின்ற தொருபரவை இலகுவே பாரம்என நெல்துனைத் தனையும் எண்னேன் முறையின் ஒரு சிறுநூக்கில் எழுபரவை யும்புக முடித்துற நிறுத்தான்.இவன் மொழிஎங்கள் தம்பிரான் வல்லபம் உணர்ந்திலைகொல் முத்தமா விகைவானயாற் றறைமணித் திடராய குன்றைநகர் ஆவியுடன் அம்புலி ஆட்வாவே அருள் உருத் தேசுபொலி அருள்மொழித் தேவனுடன் அம்புல் ஆடவாவே