640 சிற்றில் பருவம் சாற்றும்.அச் சிவனுக் கிச்சா சத்திஅங் கிருவ ராலும் தோற்றுவன் உருத்திரன் தான் சொல்லிய அவர்க்குச்சத்தி மாற்றரும் கிரியை என்பர் மற்றவர் இருவர் பாலும் போற்றுரும் அரியு திப்பன் பொறிஅவன் சத்தி யாமால் அத்திரு மாலும் மாவும் அளிப்பவந் துதிப்பன் வண்டு மொய்த்திசை முரலும் செங்கேழ் முளனவன் அவற்குச் சத்திவெண் கமலை அன்னுேர்தர வரும் உலகில் தோற்றம் நித்தன்நம் குருகு கேசன் நினைவுமாத் திரையின் ஆம்ால் என்ற பாடல்களைக் காண்க. 'மூவர் என்றே எம்பிரானெடும் எண்ணிவிண் ளுண்டு மண்மேல் தேவர் என்றே இறுமாந்தென்ன பாவம் திரிதர்வரே" என்று திருவாசகம் இரக்கத்தோடு கூறியதையும் காண்க. இரட்டையர்கள் இறைவனே மூவருள் ஒருவன் என்று கூறுதல் நரகத்திடை உய்ப்பதாகும் என்றே மொழிந் துள்ளனர். அப் பாடல், மூவா முதலா முதல்வனையும் மூவுலகில் சாவார் பிறப்பார்கள் தங்களையும்-தேவாக ஒக்க நினைவாருக் கல்லவோ ஒர்ஏழு மிக்கநரகம் விதித்தது காண் என்பது. அப்பர் பெருமாளுர் இவ்வாறு மக்கள் அறியாமையால் நாதம் அகன்ற பரனே மூவர்களுள் ஒருவராகக் கருதி நரகத்தில் இடர்ப்படுவரே என்று அவர் பால் இரக்கங் கொண்டு உபதேசிப்பாராயினர். அவ்வுபதேசங்கள், நூறு கோடி பிரமர்கள் நொங்கினர் ஆறு கோடி நாராயணர் அங்கனே ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர் ஈறி லாத ஈசன் ஒருவனே
பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/722
Appearance