பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/794

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

712 சிறுபறைப் பருவம் எழுத்தாணி பெற்றமையின் 'மாண்பு ஆர் கண்டம்" என்றனர். சேக்கிழார் மொழியினை எதிர் நோக்கி ஏடும் கையுமாக அவாவுடன் எழுத்தாளர்கள் இருந்தனர் என்ற குறிப்பை, "வயங்குறு கையேடு" என்ற தொடரில் விளங்க வைத்தனர். திருமுறைகளை எழுதுவதை அவாவுடன் மேற் கொண்ட தொண்டர்கள் உண்டு என்பதைக் சேக்கிழாரே, கணநாத நாயனர் புராணத்துள், நல்ல நந்தன வனப்பணி செய்பவர் நறுந்துணர் மலர்கொய்வோர் - பல்ப னித்தொடை புனைபவர் கொணர்தி மஞ்சனப் பணிக்குள்ளோர் அல்லு நன்பக லும் திரு அலகிட்டுத் திருமெழுக் கமைப்போர்கள் எல்லை யில்விளக் கெரிப்பவர் திருமுறை எழுதுவோர் வாசிப்போர் என்று குறித்துள்ளனர். ஈண்டு ஒர் அரிய குறிப்பை நமது திரு பிள்ளை அவர்கள் தந்துள்ளனர். அதாவது சேக்கிழார் பெருமாளுர் கவிகளைச் சொல்லிக்கொண்டே வர, ஏடு எழுதுவோர் எழுதிக் கொண்டே வந்தனர் என்பதாம். இதனை, "கையேட்டின் மாண்பார் கண்டம் கொண்டங் கெழுதுநகர் மாருதே எழுத” என்ற தொடரில் காண்க. இக்குறிப்பு உமாபதி சிவாசாரியார் பாடியுள்ள சேக்கிழார் புராணத்துள் இல்லை. ஆண்டுச் சேக்கிழாரே தம் திருக்கரத்தால் எழுதி முடித்தனர் என்ற குறிப்புக் காணப்படுகிறது. இதனை, காண்டம்இரண் டாவகுத்துக் கதைப்பரப்பைத் (தொகுத்துக் கருதரிய சருக்கங்கள் பதின்மூன்ரு நிலையிட் டீண்டுரைத்த புராணத்தில் திருவிருத்தம் நாலா யிரத்திருநூற் றைம்பத்து மூன்முக அமைத்துச்