பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/811

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுதேர்ப் பருவம் 729 இருபாலினும் மணிதங்கிய இருகோடு படைத்து வெருவார்களும் வெருவித்துயர் கோவத்தவ உரறி மருவார்குழல் உமைஅஞ்சுற வரலான் உயர்கம்பை பெருமான் எதிர் பண்டெய்திய பெருவேழமும் நிகரும் என்று கூறப்பட்டதற்கு இணங்க "மூரிப்புனல்கம்பை" என்றனர். இவ்வாறு பெருகிய கம்பா நதியினைக் கண்ணுற்ற அம்மையார், இது தாம் வழிபடும் இலங்கத்தையும் அணுகி அடித்துக்கொண்டு போகும் என்று அஞ்சி உடனே இலங்கத் தைத் தழுவி வெள்ளத்தால் அடித்துக்கொண்டு போகாத வாறு செய்தனர். இதனைக் காஞ்சிப் புராணம், ஒருகொடி எழுந்து செம்பொன் உயர்வரைக் குவடு தன்னை இருகொழுந் திருபால் போக்கித் தழிஇஎன எழுந்து வல்லே முருகலர் வேதி உம்பர்த் தன்வலம் முழந்தாள் ஊன்றிக் கருமணிப் பாவை அன்னுள் கணவரைத் தழுவிக் கொண்டாள் ” என்கிறது. இக் காட்சியை இன்றும் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் ஏகாம்பரநாதர் கோவில் மூலட்டான இவிங்க தரிசனத்தின் போது காணலாம். இங்ங்ணம் தழுவிய போதுதான் இறைவர், தாம் கல்லாக இருப்பதால் அவளது முலை உறுத்தப்படுமே என்று அருள் நினைவு கூர்ந்து, தம் திரு மேனியினைக் குழைந்து கொடுத்தனர். இதனையும் அப் புராணம், மணிமுலைக் குவட்டி ைேடு வளேக்கையால் செருக்கிப் துணிவரும் காதல் விம்ம காதலி தழுவ லோடும் திணிஇருள் இறுக்கும் சோதிக் திருவுருக் குழைந்து 35RTLஅணிவளைத் தழும்பி னேடு முலைச்சுவ டணிந்தார் ੰ என்று போற்றுகிறது. திருமேனி முற்றும் குழைந்தது என்பது மேலே காட்டிய பாடலில்வரும் இக்கருத்துக்களே