பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 சேக்கிழார்

தொண்டை நாட்டுச் சிவத்தலங்கள்: காஞ்சி, திருமுல்லைவாயில், திருமயிலை, திருவான்மியூர், திருவொற்றியூர், திரு இடைச்சுரம், திருமாற்பேறு, திரு ஒத்தூர், திரு ஆலங்காடு, திருவூறல் போன்ற சிவத்தலங்கள் அப்பர் காலமாகிய கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே உயர்நிலையில் இருந்தன. அவை நாயன்மார் காலமான பல்லவர் காலத்தில் பின்னும் சிறப்புற்றன; ஆதித்த சோழன் மரபினர் காலத்தில் கற்றளிகளாக மாறிவிட்டன. பூசை, விழாக்கள் முதலிய சிறப்புகளில் செம்மையுற்றன. பாடல் பெற்ற கோவில்களைப் போலவே தொண்டை நாட்டுப் பிற (பல்லவர் - சோழர் கால)க் கோவில்களும் வர வரச் சிறப்புப் பெற்றுப் பொது மக்கட்குச் சமய உணர்ச்சியை ஊட்டி வந்தன.

தொண்டை நாட்டுக் கோட்டங்கள்: தொண்டை நாடு எப்பொழுது யாரால் 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. என்பது திட்டமாக கூறமுடியாது. இருபத்து நான்கு கோட்டங்களின் பெயர்களும் பல்லவர் காலத்தில் வழங்கியவாறே பிற்காலச் சோழர் காலத்திலும் வழங்கி வந்தன. அவ்விருபத்து நான்கு பிரிவுகளாவன:

1.புழல் கோட்டம் 2.ஈக்காட்டுக் கோட்டம் 3. மணவிற் கோட்டம் 4. செங்காட்டுக் கோட்டம். 5. பையூர்க் கோட்டம். 6. எயில் கோட்டம் 7. தாமல் கோட்டம், 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம் 3. களத்தூர்க் கோட்டம் 10. செம்பூர்க் கோட்டம், 11. ஆம்பூர்க் கோட்டம் 12. வெண்குன்றக் கோட்டம் 13. பல்குன்றக் கோட்டம் 14. இலங்காட்டுக் கோட்டம் 15. கலியூர்க் கோட்டம் 16, செங்கரைக் கோட்டம் 17. படுவூர்க் கோட்டம் 18. கடிகூர்க் கோட்டம் 19. செந்திருக்கைக் கோட்டம் 20. குன்ற வட்டானக் கோட்டம் 21. வேங்கடக் கோட்டம் 22. வேலூர்க் கோட்டம் 23. சேத்தூர்க் கோட்டம் 24. புலியூர்க் கோட்டம் என்பன.