இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வஞ்சிமாநகரம்.
135
என்னும் அடிகளது வாக்கின் போக்கால் அறியப்படுகிறது. மணிபல்லவத்தினின்று புறப்பட்ட மணிமேகலையும் முதலில் இச்செங்குன்றையடைந்து, தன் தாயாகிய அப் பத்தினியை ஆங்குத் தரிசித்தபின்பே வஞ்சி நோக்கிச் சென்றனளென உணர்க.[1] இச்செங்குன்று இப்போது செங்குன்றூர் என் னும் பெயருடன் மலைநாட்டில் [2] உள்ளது. இவ்வூரிலுள்ள குன்றின் மேல் மிகப்பிரபலம்பெற்ற பகவதிகோயிலொன்று உண்டு. இத்தேவிக்குத் திருவிழா முதலியவை பெருஞ்சிறப்புடன் நடைபெறுகின்றன. இப்பகவதியை மதுரை மீனாக்ஷியம்மனாக அப்பக்கத்தார் இன்றும் வழங்கிவருவதாகத்தெரிதல் ஆராயத்தக்கதேயாம்.