இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சேரவமிசத்தோர்
19
சமீபித்த உறவினன் போலும். இவர்களன்றிப் பிற்காலத்தில் கணைக்காலிரும்பொறை[1] என்பவனொருவனும் இவர் வழியில் ஆண்டனன். இவரையெல்லாம் இரும்பொறை மரபினர் என்று நாம் கூறுதல் தகும். செங்குட்டுவன், இவ் விரும்பொறைமரபின் முன்னோருள் ஒருவனாகவும் கூறப்படு தலால்,[2] இம்மரபினரும் நம் சேரன்மரபினரும் நெருங்கிய தாயத்தார் என்பது தெளிவாகின்றது.
இரும்பொறை மரபினர்.
1. மாந்தரம் பொறையன் கடுங்கோ
┊
2. கருவூரேறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேரலிரும்பொறை
┊
3. அந்துவஞ் சேர லிரும்பொறை.
│
4. செல்வக் கடுங்கோ வாழியாதன் ╳ பதுமன்றேவி.
│
5. தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை ╳ அந்துவஞ் செள்ளை.
│
6. இளஞ்சேர லிரும்பொறை.
┊
7. யானைக்கட் சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை.
┊
8. கணைக்கா லிரும்பொறை.