இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
56
சேரன் - செங்குட்டுவன்
என்று ஊரெங்கும் பறை அறையப்பட்டது.
3. கால்கோட் காதை.
செங்குட்டுவன் வடநாட்டிற்செய்த பெரும்போரும், இமயஞ்சென்று
பத்தினிக்குக் கல்லெடுப்பித்ததும்.
இங்ஙனம் வஞ்சிமாநகரிற் பறையறையப்பட்ட பின்னர், சேரன்-செங்குட்டுவன் அன்று மாலையில், ஆசான் பெருங்கணி அமைச்சர்களும் தானைத்தலைவருந் தன்னை வாழ்த்தி நிற்கச் சிங்காதனத்தே வீற்றிருந்து தன் சேனாதிபதிகளை நோக்கி அடியில் வருமாறு கூறுவானாயினான் :–“ஆரியமன்னர் பலரும் தம் நாட்டில் நிகழ்ந்த சுயம்வரமொன்றன் பொருட்டுக் குழுமியிருந்த பெருங்கூட்டத்தே - ‘தென்றமிழ்நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து - மின்றவழு மிமய