பக்கம்:சைவ சமய விளக்கு.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿卓岛 சைவ சமய விளக்கு முதலியவற்தைப் பெற்றிருத்தலோடு ஆமையாது அவர்கள் ஆணைவழி அவர்கள் போலவே அவரது அதிகா ரங்களைப் பெற்றிருத்தலே அபர சாயுச்ச் பதசாயுச்சங் களாம் என்பதை அறிக. இனி, சாலோகம் முதலியவற்றின் பயன்களை விளக்குவேன். சிறப்பு உண்மைச் சரியையில் சரியை முதலிய நான்கிலும் நின்றோர் திவிர்த்திகலையுட்பட்ட உருத்திர உலகங்களில் சாலோகம் முதலியவற்றைப் பெறுவர்: கிரியையிற் சரியை முதலிய நான்கிலும் நின்றோர் பிரதிட்டாகலை யுட்பட்ட உருத்திர உல்கங் களில் சாலோகம் முதலியவற்றைப் பெறுவர். இவ்விரு உலகங்கட்கும் புவன பதிகட்கும் கேண்ட உருத்திரிமுதல் வராதலை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன். அதனை ஈண்டு நினைவுகூர்க. யோகத்தில் சரியை முதலிய நான்கிலும் நின்றோர் வித்தியா கலையுட்பட்ட உருத்திர உலகங்களில் சாலோகம் முதலியவற்றைப் பெறுவர். இவ்வுலகங்கட்கும் புவனங் கட்கும் முதல்வர் அனந்ததேவர் என்பதை நீ நன்கு அறிவாய். இனி, ஞானத்துள் கேட்டலின் விரியாகிய ஞானச் சரியையிற் சரியை முதலியவற்றில் நின்றோர் நிவிர்த்தியும் பிரதிட்டையுமாகிய கலைகளுட்பட்ட அபரமுத்தித்தான மாகிய சிவலோகங்களில் சாலோகம் முதலியவற்றைப் பெறுவர். சிந்தித்தல், தெளிதல் இவற்றின் விரியாகிய சரியை முதலியவற்றில் நின்றோர் முறையே வித்தை சசந்தி என்னும் கலைகளுட்பட்ட அபரமுத்தித் தான மாகிய சிவலோகங்களில் சாலோகம் முதலியவற்றைப் பெறுவர். திட்டையில் மீளாது நிற்க மாட்டாதோர் ஞானத்துள் ஞானமாகிய அதனிற் சரியை முதல் யோகம் ஈறாகிய நிலையுடையராய் நிற்பராகலின். அவர் சாந்திய தே