பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சதுர் முகன்

சமட்டி.சமஷ்டி


சதுர்முகன்- நான்முகன்.

சதுர்விதம் - சன்மார்க்க முத்திகள் 4.

சந்தணை - சந்தனம் சேர்ந்த

சந்தானம்-1) குருபரம்பரை 2) 28 ஆகமங்களுள் ஒன்று.

சந்தான அமைப்பு-பா. சந்தானகுரவர்.

சந்தான குரவர்- சந்தானா சாரியார். இறையறிவுபெற்றவர். அகச்சந்தான குரவர், புறச் சந்தான குரவர் என இருவகை யினர்.

சந்தான குரவர், அகச்- நால்வர். நந்திதேவர்,சனற்குமாரர்,சத்திய ஞான தரிசினிகள், பரஞ்சோதி முனிவர். இவர்கள் எப்பொழுதும் திருக்கயிலையே நோக்கி இருப்பவர்கள்.

சந்தான குரவர், புறச்- நால்வர். மெய்கண்டார், அருணந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாசாரியார். திருக்கயிலையில் உபதே சிக்கப்பட்ட உபதேசத்தைப் புவியில் பரவச் செய்தவர்கள். இவர்கள் நந்தி பெருமானிடத்தில் உபதேசம் பெற்ற சனற் குமாரமுனிவர் வழிவந்தவர் கள். இவ்வழியினரே இப்பொழுது குருமகாசந்நிதானங்களாகச் சைவ ஆதீனங்களை அருள்பாலித்து ஆண்டு வருடவர்கள். இவர்கள் மெய்கண். பார்வழிவந்தவரே.பா.ஆதீனங்கள்.

சந்தான வழி - குருபரம்பரை வழி. இவ்வழி வந்தவரே தற் பொழுது ஆதீனத்தலைவர்க ளாகவுள்ள பண்டார சந்நிதிகள்.

சந்திர ஞானம் - 28 ஆகமங்களுள் ஒன்று.


சந்தேகம் - ஐயம்.

சந்நிதி-திருமுன், சங்கற்பம்

சந்நியாசம் - ஆச்சிரமம் 4 இல் ஒன்று.

சப்தம் - உரை, ஆகமம்

சப்ததானம் - ஏழுர்த் திருவிழா. திருப்பழனம், திருச்சோற்றுத் துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திரு நெய்த்தானம் ஆகிய ஆறு இடங்களுக்கும் திருவையாற்றி லுள்ள சிவபெருமானும் நந்தியும் எழுந்தருளும் விழா.

சப்தநரகம்-ஏழுநரகம்பொய்யர் வாழும் உலகம். அவையாவன. அள்ளல், இரெளரவம், கும்பிபாகம், கூடசாலம், செத்துத் தானம், பூதி, மாபூதி

சப்த பிரபஞ்சம் - சொல்லுலகம்.

சப்த பிரமாணம் - உரையளவை. ஆகமம் அல்லது வேதம். இது தந்திரம், மந்திரம், உபதேசம் ஆகிய மூன்றையுங் கொண்டது.

சபீசை-சபீசதீக்கை அறிவொழுக் கங்களில் சிறந்துள்ள உத்தம சீடர்களுக்குச் சைவ சமய ஆசார கருமங்களைச் செய்து வரும்படி உபதேசிக்கும் கிரியாவதி தீக்கை வகை.

சபை - அவை. ஆறு:1) இரத்தின சபை - திருவாலங்காடு 2) கனக சபை - சிதம்பரம் 3) வெள்ளி சபை - மதுரை 4) தாமிர சபை - திருநல்வேலி 5) சித்திர சபைதிருக்குற்றாலம் 6) ஞான சபை - வடலூர்.

சமட்டி,சமஷ்டி,-தொகுதி கூட்டம், கூட்டு.

105