பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தை

சிந்தை - அறிவு, இதயத்தாமரை,அன்பு.

சிம்பு - சிவன்.

சிம்புள் - சரபம் என்னும் ஒரு வகை விலங்கு நரசிங்கத்தைக் கொல்லச் சிம்புள் வடிவம் கொண்டார் சிவன்.

சிரஞ்சீயவர் - இவர் எழுவர். அசுவத்தாமன், மாபலி, வியா சன், அனுமான், விபீடணன், கிருபாசாரி, பரசுராமர்.

சிருட்டி - படைப்பு, இறைவன் ஆக்கல் தொழில்

சிலப்பதிகாரம் - ஐம்பெருங்காப் பியங்களில் ஒன்று. ஆசிரியர் இளங்கோவடிகள். சமயப் பொறை உடையது. இதில் வரும் பிறவா யாக்கைப் பெரியோன்' என்னுந்தொடர் இறைவனைக் குறிப்பது.

சிலம்பி - சிலந்தி.

சிவக்குறி - சிவலிங்கம்

சிவகணம் - சிவ பரிவாரம்.

சிவகணமுதல் - நந்திதேவர்.

சிவகதி - சிவபுண்ணியம்.

சிவகந்தம் - இறை மணம் எ-டு.சிவகந்தம் பரந்து நாற.

சிவப்கலப்பு - உயிர் உடலோடு சேர்ந்து வாழும்பொழுது, எத்தகைய பொருள் எதிர்ப்படினும் அவற்றை அவ்வளவில் உணராது, அவற்றின் மெய்மையை உணர்ந்து அவற்றில் பற்று வைக்கும் உயிரியல்பையும் அவ்வுயிர்க்கு மேலாகிய் அருளையும் அதற்கும் மேலாக விளங்கும் சிவத்தையும் உணர்ந்து அச்சிவத்தையே பற்றி நின்று நினைவு, மறப்பு, உணர்வு, துய்ப்பு ஆகிய அனைத்திற்கும் அப்பரம்பொருளே காரணம் என்பதை நன்கு உணர்ந்து, அதனோடு கலந்து நிற்பதாகும்.

சிவக்காட்சி - யான் எனது என்னும் செருக்கறுமாறு திருவருள் உயிர்களிடத்துப் பொருந்தி இருப்பதே இறைவனின் திருவடியாகும். பார்க்குமிடத்தில் எல்லாம் சிவமாகவே தோன்று வது இறைவனின் திருமுகமாகும். இறைவனிடத்து விளங்கி நிற்கும் பேரின்பமே இறைவனின் திருமுடியாகும். இவ்வுண்மைகளை உணர்ந்த உயிர் எப்பொழுதும் நீக்கமற நிற்கும் அப்பரம் பொருளைத் தம் பட்டறிவால் கண்டு உடல், கருவி, உலகு முதலிய கட்டுகளிலிருந்து நீங்கித் திருவருள் இன்பத்தைப் பெறுவது.

சிவ குருபத்ததி - ஆகம பிழிவு. சிவாச்சாரியார்கள் இயற்றியது.13 ஆம் நூற்றாண்டு.

சிவகுமாரர்கள் - விநாயகர், வைரவர்,வீரபத்திரர், முருகன் ஆகிய நால்வர்.

சிவகோணம் - சிவனைக்குறிப்பதாகத் தாமிரம் முதலியவற்றில் வரையும் கோணம். சிவசங் கிராந்த சைவர் - ஐம்பொறி களே, சிவஞானத்தை ஆன்மா விற்கு உணர்த்துபவை என்னுங் கொள்கையினர்.

சிவசங்கிராந்த வாத சைவம் - அகச்சமயம் 6 இல் ஒன்று. முத்தியில் உயிர் சிவத்துடன் ஒன்றாய்ப் போதலேயன்றி, அடிமை ஆவதில்லை என்னுங் கொள்கை.

சிவசத்தர் - சைவ சமயத்தில் கூறிய பரமுத்தி அடைந்தவர்.

சிவசத்தி - சத்தி 5 இல் ஒன்று. சிவனை விட்டு நீங்காதது.

116