பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கன்மம் திரோதான சத்திக்குக் கருவியாய் அதனுள் அடங்குதலின் வேறு கூறப்படவில்லை. மகாரம் ஆணவ மலத்தையே குறிப்பது. ஆயினும் அழுக்கு நீக்கும் உவர்மண் போன்று அம்மலத்தைக் கழுவுதற்கென இறைவனாற் கூட்டப்பட்டது மாயை என்பார் அதனையும் மலத்தோடு இணைத்து மலமாயை என ஒருங்கு குறித்தார் எனக் கருத வேண்டியுளது. இத்திருமந்திரத்தை அடியொற்றி இதன் விளக்கமாக அமைந்தது

“சிவனரு ளாவி திரோதமலம் ஐந்தும்

அவனெழுத் தஞ்சின் அடைவாம் - இவனின்று நம்முதலா ஒதிலருள் நாடாது, நாடும்அருள் சிம்முதலா ஒது நீ சென்று’ (உண்மை. 41)

எனவரும் உண்மை விளக்கமாகும். இதன்கண் கன்மமும் மாயையும் தனித்துச் சொல்லப்படவில்லை. "மாயையும் கன்மமும் திரோதான சத்திக்குக் கருவியாய் அதனுள் அடங்குதலின், திரோதான சத்தியின் இலக்கணங் கூறவே மாயை கன்மங்களது இலக்கணமுங் கூறியவாறாதலறிக” (சிவ. பாடியம் சூ5) என விளக்கந்தருவர் சிவஞான முனிவர். எனவே மேற்குறித்த திருமந்திரத்தின் இரண்டாமடி,

'சிவனருளான் மாத்திரோத மலமாம்’

என்றிருத்தல் வேண்டுமெனத் தோன்றுகின்றது.

திருவைந்தெழுத்து இறைவன் திருவருளின் வண்ணமாயது என்பார் சிவனருளாய சிவன் திருநாமம்’ என்றார் திருமூலதேவர். ஆதியார் அருளாய அஞ்செழுத்து, ஒதியேறினார் உய்யவுலகெலாம் (பெரிய. திருஞான) என வரும் சேக்கிழார் வாய்மொழி இக்கருத்தினை வலியுறுத்துவதாகும்.

'திருவாய்ப் பொலியச் சிவாநமவென்று நீறணிந்தேனே' (4)

'நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநமவெனப் பெற்றேன்’

(திருவாசகம்)