பக்கம்:சொன்னார்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22


வியாபாரிகள், தொழிலதிபர்கள் அரசியலில் ஈடுபடும் போது, கலைஞர்கள் ஈடுபடுவதில் தவறு இல்லை என்பது என் கருத்து. ஆனால் அதே நேரத்தில் நடிகர்களை நம்பி மட்டுமே அரசியல் இருந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன்.

— நடிகர் ஜெய்சங்கர் (8.1-1975)

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியா தன்னுடைய அன்பையும் அறிவையும் கொண்டு வந்து சீனாவின் வாயிலில் நின்றபோது, பெளத்த ஆசாரியார்கள் உங்களுடன் சகோதர முறையில் சேர வந்தார்கள். அந்தப் பிணைப்பு இன்னும் இருக்கிறது. ஆனால் இப்போது அது சீன மக்கள் உள்ளத்தில் நீறு பூத்த நெருப்புப் போல் இருக்கிறது. பல நூற்றாண்டுகளின் அலட்சியத்தாலும் அடிமைத்தனம் காரணமாகவும் அந்தத் தொடர்பு இப்போது காடு மண்டிய வழிபோல ஆகிவிட்டது. ஆனால் அந்த உறவின் அடையாளங்கள் இப்போதும் காணக் கிடைக்கும். அத்த உறவுப் பிணைப்பை உறுதிப்படுத்தவே நான் இங்கு வந்திருக்கிறேன்.

—கவி ரவீந்திரநாத் தாகூர் (12-4-1924)
(சீனாவிலுள்ள ஷாங்காய் நகரத்தில்)

நம் நாட்டில் ஒவ்வொரு லட்சம் ஜனத்தொகையில் 85 பேர்கள் புற்று நோயினல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தென்னாட்டில் புற்று நோய் கண்டவர்களில் 40 சதவிகித்த்தினருக்கு அது உதடு, நாக்கு, கன்னங்களில் மட்டுமே உள்ளது. வெற்றிலைப் பாக்குடன் புகையிலையைச் சேர்த்து மெல்லும் பழக்கமே இதற்குப் பெரிதும் காரண மென வைத்திய நிபுணர்கள் கருதுகிறார்கள். எனவே அப்பழக்கத்தை அடியோடு நிறுத்த இயலாவிட்டாலும் குறைக்கும்படி வற்புறுத்த வேண்டும்.

— திருமதி ஜோதி வெங்கடாசலம் (13-1-1965)
(தமிழ்நாடு சுகாதார அமைச்சர்)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/24&oldid=1063624" இலிருந்து மீள்விக்கப்பட்டது