சின்ன அண்ணாமலை
135
“அப்பா தப்பித்தோம் ஒரு புலவர் ஆராயச்சியில் 7 சமஸ்கிருத வார்த்தைகளும், மற்றொரு புலவர் ஆராய்ச்சியில் 14 வார்த்தைகளும் தொல்காப்பியத்தில் இருக்கின்றன.
என்னுடைய ஆராய்ச்சியில் சொன்ன 11 வார்த்தைகளும் அதனுள் அடக்கம்தானே “என்று நிம்மதியடைந்தேன். 7 வார்த்தை புலவர், பாக்கி 4 வார்த்தைகள் என்ன வென்று என்னிடம் கேட்டால் 14 வார்த்தை புலவரிடம் அனுப்ப வேண்டியதுதானே?
மாநாடு முடிந்ததும் பலர் என் தொல்காப்பியச் சொற்பொழிவு பிரமாதம் என்றும் அபாரம் என்றும் புகழ்ந்தார்கள்.
நடந்த நிகழ்ச்சிகளை சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களிடம் கூறினேன். அவர்கள் ‘ஓகோ’ வென்று சிரித்துவிட்டு, சொற்பொழிவில் நீ கடைப்பிடிக்கும் முறைதான் நம் மக்களுக்குச் சுலபமானது.
உபதேசம் செய்வது எளிது. சிறிது நேரம் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்படி செய்வதுதான் பெரிய சாதனை. இதை நீ சுலபமாகச் செய்கிறாய், என்றைக்கும் இதே வழியைக் கடைப்பிடி என்று உபதேசம் செய்தார். அவருடைய அறிவுரைப்படி இன்றும் நான் மக்களைச் சிரிக்க வைப்பதே என் சொற்பொழிவின் லட்சியமாக வைத்திருக்கிறேன்.