230
சொன்னால் நம்பமாட்டீர்கள்
“தாங்கள் சொல்வது மனித இயல்பை ஒட்டிய சங்கதிதான் இருந்தாலும், மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்திய பிறகு மக்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டாமா?” என்றார்.
“மக்களுக்கு மதிப்புக் கொடுப்போம். ஆனால் உங்கள் கட்சியை நாங்கள் மதிக்க முடியவில்லையே,” என்றேன்.
“பந்தை காங்கிரஸ்காரர்களாகிய நீங்கள் எங்கோ வீசி எறிய, அது உங்கள் மீதே வந்து தாக்கும் போது நீங்கள் வேறு யாரையும் குறை கூறிப் பயன் இல்லை,” என்றார்.
பின்னர் இருவரும் படுத்துத் துங்கிவிட்டோம். காலை எழுந்ததும் செங்கற்பட்டு ஸ்டேஷனில் அன்புடன் எனக்குக் காலை ஆகாரத்தை அவரே பரிமாறினார். அது முடிந்ததும், என்னிடமிருந்த ஒரு புத்தகத்தை வாங்கிப் பார்த்தார்.
அது நான் எழுதிய ஒருநாவல். தலைப்பு “மானமே பெரிது என்பதாகும்."இந்த நாவல் நம் சந்திப்பின்நினைவாக என்னிடமே இருக்கட்டும். அதில் அன்பளிப்பு என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தாருங்கள்,” என்று புத்தகத்தை நீட்டினார். கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.
மாம்பலம் ஸ்டேஷன் வந்ததும் அண்ணாவிடம் விடைபெற்றுக்கொண்டு ரயிலைவிட்டு இறங்கினேன்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள், உண்மையில் என்மனத்தில் அது வரையில் அண்ணாவைப் பற்றி இருந்த துவேஷ எண்ணம், ஸ்டேஷனைவிட்டு ரயில் போனதைப்போல் என் இதயத்தை விட்டுப் போய்விட்டது.