150 சொர்க்கவாசல் டும் துணியைக் கொண்டு வரு கிறான். தாதிகள் பன்னீர் நிரப் பக் கண்டு. பணி: அன்ன நடைன்னு எந்தப் புலவனோ எழுதித் தொலைச்சாலும் தொலைச்சான், இதுக என்னடான்னா, ஒரு வேலையச் செய்து முடிக்க இவ்வளவு நேரமாகுது. (தாதிகள்' குறும்பாக அவளைப் பார்த்துவிட்டு நடக்க, அவன் அவர்களிடம் சற்றுக் கடுமையா கப் பேசுவதுபோல பாவனை செய்து? பணி: சரிதான்-அன்ன நடை போட வேண்டாம். வேலை ஆகட்டும் சுருக்கான்னா, இதுக ஆமை நடை போடு துக. [அவர்கள் போன பிறகு.. சும்மாவா, தெரியாமலா எழுதினாங்க புலவருங்க, அன்ன நடைன்னு... பார்க்கப் பார்க்க அழகாத்தான் இருக்கு- நடையும், உடையும்--உம்... (பெருமூச்செறிகிறான். வெளிப்புறமிருந்து வெற்றி வேலனின் குரல் கேட்டு திடுக்கிட்டு.] பணி: அட்டா! அவர்தான்! (பரபரப்படைகிறான். இரண்டு பணியாட்களுடன் வெற்றிவேலன் வருகிறான். மேலங்கியைக் களைந்தபடி பணியாள் ஒருவன் அதை வாங்கி வைத்துக் கொள்கிறான். அடக்கத்துடன் குளத்தில் இறங்கி நீராடுகிறான். ஒரு பணியாள் மன்னனுக்கு உடல் தேய்த்து விடுகிறான். வெற்றி வேலன் களிப்புடன் இருக்கிறான். அவன் களிப் பாக இருப்பதால் பணியாளும் களிப்பாகவே இருக்கிறான். திடீரென்று வெற்றிவேலன், இடி. முழக்கமிடுவது போன்ற குரலில்...] வெற்றி: மடயன்! அமைச்சர் எங்கே? பணி: அவர்.அவர்...
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/150
Appearance