உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 219 (குழந்தை அவன் கையைக் கடித்துவிட்டு, சிரித்தபடி மேலும் பாடுகிறது. குழந்தையை அவன் பிடிக்க முயலுகிறான். குழந்தை தவறி மாடியிலிருந்து கீழே விழுகிறது. பணியாள் பதறி ... 'ஐயோ *; என்று கூவுகிறான். குழந்தைக்குப் பலத்த அடி. இரத்தம் கசிகிறது...] காட்சி-110 டம்: களம். இருப்: குமாரதேவி, வெற்றிவேலன், தூதுவன். (யுத்த களத்தில் குமார தேவியின் கூடாரம். போர்க் களத்துப் படத்தைப் பார்த்தபடி இருக்கிறாள். வெற்றிவேலனுடன்.அப்போது அவசரமாக வந்து சேர்ந்தான், வெற்றிவேலன் நாட்டு வீரன்.) வீரன்: இளவரசிக்குப் பேராபத்து. மருத்துவர் உடனே தங்களை வரச்சொன்னார். குமாரி என்ன, இளவரசிக்கா? வெற்றி: என் குழந்தை மரகதமணிக்கா? என்னடா ஆபத்து? வீரன்: கடுமையான ஜூரம் - பலமான அடி ஆபத் தான நிலைமை. . குமாரி: போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்-தயங்க வேண்டாம். நிலைமை இங்கு டரவாயில்லை, புறப்படுங்கள். [வெற்றிவேலன் மனம் பதறியவனாய்ப் புறப்படு கிறான்...) காட்சி-111 இடம்: வெற்றிவேலன் அரண்மனை. இருப்: வெற்றிவேலன், மரகதமணி, மருத்துவர், பணியாட்கள்