சொர்க்கவாசல் 23 முத்து: மனதை நான் மயக்கி விட்டேன் என்கிறாயா, நண்பா! மதி: திலகாவின் மனதிடம் எனக்குத் தெரியுமே, முத்து? மயக்கமல்ல, அவள் மனதிலே நீ பதிந்து விட்டாய்--தூய் மையான காதல். முத்து: காதலின் தூய்மையைக் கெடுத்திடும் கயவ னாக மாட்டேன், மதிவாணா! .. , மதி: உன் குணத்தை நான் நன்றாக உணருகிறேன். உண்மைக் காதலைத் தடுத்திடும் உலுத்தனல்ல, நான்--- மகள் மனம் அறிந்து நடக்கத் தெரியாதவர்களல்ல, தாயார் ஆனால்.. முத்து: ஆனாலா? அந்த ஆபத்தான சொல்லை வீசாதே .மதிவாணா! மதி: கண்டதும் காதல் கொண்டு விடுவது சுலபம். ஆனால் பெண் குலத்துக்கு பெரும் பழிதேடிடக் காதலையே படுகுழியாக்கும் பாவிகள் பலர் உண்டு. . முத்து: அவர்களை, நான் மனிதருள் மிருகமென்பேன், மதிவாணா! மதி: (கனிவுடன்) திலகா சிறு பெண். தோட்டத்திலே ஆடிப்பாடிக் கிடக்கும் இளமங்கை. கள்ளங்கபடமறியா தவள், முத்து என் உள்ளம் சிலந்தி வலையல்ல மதிவாணா! மதி: நான் பரிபூர்ணமாக உன்னை நம்புகிறேன். வான வில்லைக் கண்டு சொக்கிடும் சிறுவனல்ல நீகடமை அறிந் தவன். முத்து: வாழ்வின் விளக்காவாள், திலகா! (கற்பகத்தம்மாள் வரக்கண்டு இருவரும் பேச்சை நிறுத்திக் கொள்ள.
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/23
Appearance