உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 235 இடம்: காட்சி- 122 வெற்றிவேலன் அரண்மனை. இருப் மதிவாணன், அரசன், சேவகன். மதிவாணன் வரக்கண்ட சேவகன், அரசனிடம்] சேவ: மதிவாணன் கட்டாரி கொண்டு வருகின்றான் கடுங்கோபமாக. அரசன்: வருகிறானா? என் உத்திரவின்றி அவனை ஏதும் செய்ய வேண்டாம். [அரண்மனையின் உட்புறக் கதவை உதைத்துத் தள்ளிவிட்டு ஆவேசமாக மதிவாணன் வருகி றான்! வெற்றிவேலன் கடைசி அறையில் ஆசனத் தில் இருக்கிறான். அவனருகே பாதுகாவலர் சிலர் உள்ளனர். மன்னனைக் கண்டதும் ஆத். திரம் கொள்கிறான் மதிவாணன். என்றாலும், தெளிவாக, உறுதியுடன் பேசுகிறான்] மதி: கவிஞன் என்ன கனல் கக்கும் கண்களுடன், கரத் தில் கட்டாரியுடன் வந்திருக்கிறானே என்று எண்ணுகிறாயா காவலனே! திலகாவின் அண்ணன் வந்திருக்கிறேன் தீயவனே! திலகாவின் அண்ணன் - திலகாவுக்கு நேரிட்ட கதியைத் தெரிந்து கொண்டு, உன்னை அதோகதியாக்க வந்திருக்கி றேன். வேங்கையிடம் பிடிபட்ட புள்ளிமான் போல, புயலில் சிக்கிய பூங்கொடிபோல் ஆனாளே, என் திலகம்! களங்கமற்ற அந்த முகத்தைக் கண்டாயே காதகா! எப்படி உன் மனம் இடம் தந்தது இழிசெயல் புரிய? எப்படிக் கதறினாளோ என் தங்கை! எவ்வளவு கெஞ்சினாளோ!காலடியில் வீழ்ந்திருப்பாள்; கடவுளைத் துணைக்கு அழைத்திருப்பாள்-- கண்ணீரைப் பொழிந்திருப்பாள். கல்மனம் படைத்தவனே! உன் மனம் இளகவில்லையா ஒரு துளி?எப்படி இளகும்? மக்களைக் கசக் கிப் பிழிந்து மதோன்மத்தனாக வாழ்ந்து வந்தவனல்லவா நீ ? வறண்ட தலை, இருண்ட விழி, உலர்ந்த உதடு, சுருங் நீ