ப சொர்க்கவாசல் 39 ஆட்டிப் படைக்கும் அந்த உலுத்தன், உத்தமன் முத்து மாணிக்கத்தின் தந்தை... கற்: உன் அண்ணனைக் கேவலமாகப் பேசி, இழி வாக ஏசினான் திலகா மதி: ஆணவம் பிடித்தவன், என் நெஞ்சிலே வேல் பாய்ச்சினான்; தீயால் சுட்டான். 'திலகா: அண்ணா! ஐயோ, என்னால் எவ்வளவு வேதனைச் மதி: பணம் தேடி அலையும் அவனுக்குப் பண்பு என்ன தெரியும்? காசாசை பிடித்தவன்; காட்டுக் குணம் படைத்த வன்; அவன்எப்படி அறிவான் காதலின் மேன்மையை, கண்ட படி ஏசினான் என்னை-கன்னத்திலும் அறைந்தான். (திலகா மதியின் கன்னத்தைத் தடவ...] . அங்கு ஒன்றும் இல்லை, திலகா! அங்கு ஒன்றும் இல்லை. (ஆத்திரத்துடன், தன் மார்பில் அறைந்தபடி) இங்கே இருக் கிறது புண். என்னை வேதனைப் படுத்தும் புண் இங்கே இருக்கிறது திலகா, இங்கே! என்ன சொன்னான் தெரியுமா? உன் எடைக்கு எடை தங்கம் தரவேண்டுமாம். முத்துமாணிக் கத்தை திருமணம் செய்து கொள்ளும் நிலை உனக்கு அப் போதுதான் ஏற்படுமாம்--இந்தப் பொற்கொடி! இந்த முழுமதி!-- போதாதாம்! பொன் வேண்டுமாம் பொன்? "எடைக்கு எடை தரமுடியுமாடா மூடா என்று கேட் டான், மடயன்! உன் எடைக்கு எடை தங்கம் தர முடியும் என்னால். (திலகாலின் முகத்திலே சோகத்தையும் பிய்த்துக் கொண்டு புன்சிரிப்பு பிறக்கிறது...) இவனைப் போல, பல்லைக் காட்டி அல்ல; அடுத்துக் கெடுத்து அல்ல; பாதகம் புரிந்து அல்ல; என் கவிதை எனக் குக் காணிக்கை தரும் வேண்டும் அளவு. இந்தப் பணப்பித் தன் கண்டு மிரளும் திலகா உன் அண்ணாவின் 37107 ஆள MAKASTALAI AR
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/39
Appearance