32 சொர்க்கவாசல் வணி: இலாப வேட்டைக்காரர்கள்! சகலகவாவல் லியே! நீ சாய்ந்து கொள்கிறாயே, சர்ப்பாசனம்- அது சந்திர சேகரனுக்குச் சாக்கு விற்றதில் கிடைத்த லாபத்திலே வாங் கினதுதான்! மாலையில், நீ மினுக்கிக் கொண்டு நிற்கி றாயே நிலக்கண்ணாடி முன்பு, அது ஏது தெரியுமா? எல் லப்பன் கடையை ஏலத்தில் எடுத்தேனே, அங்கு கிடைத்தது. இங்கே உள்ள ஒவ்வொரு பொருளும் அப்படித்தான். உன் உடை, உணவு, உல்லாசம், மாளிகை, தோட்டம், வண்டி, வாகனம், விதலிதமான ஆபரணம் இவைகளை வேதாந்தம் தேடித்தரவில்லை; மாயத்தால் கிடைத்ததல்ல. [மாது கோபம் கொண்டுJ மாது: எப்படிக் கிடைத்தன என்பது எனக்குத் தெரி யுமே! ஏமாளிகளிடம் தட்டிப் பறித்தவை. வணி: (கோபம் அதிகமாகி) மக்கள் மன்றத்திலே மட மன்னார்சாமிகள் முன்பு கூவினீர்களாம் இப்படித்தான். இலாப வேட்டை! கொள்ளை வரபம்! உம். மாது: இலாப வேட்டைதான். கொள்ளை லாபம் தான்; சந்தேகமென்ன? வணி: ச்சீ! வாய்க்கொழுப்பைக் காட்டாதே. மேலும் மேலும். கொள்ளையாம் கொள்ளை! அந்தக் கொள்ளை லாபம் கொடுத்த பொருள்கள்தான் உன்னைச் சூழ இருப் பவை. [தன்னைச் சுற்றியுள்ள போக போக்கியப் பொருள்களை மாது பார்க்கிறாள், வெறுப்புடன்] ஏழைகளின் இரத்தத்தைக் குடிக்கிறார்கள் என்று கொக் கரித்தீர்களாமே. அந்த இரத்தத்தைக் குடித்தவர்கள்தான் நீயும். இலாப வேட்டையாம், இலாப வேட்டை! உனக்காகத் தான் நான் அந்த வேலை செய்தேன். மாது: (கேலிச்சிரிப்புடன்) எனக்காக! .
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/52
Appearance