உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சொர்க்கவாசல் வெற்றி: கேள்விப்பட்டேன்! அருமையான இசைத் திறமை. அமைச்சரே! மதிவாணனை ஆஸ்தானக் கவியாக நியமித்தால் என்ன? கும். மாசி: அதைக் கூறவே வந்தேன். கோப்பையைப் பார்க்கிறான். அருவருப்புடன்...) வெற்றி: இதிலென்ன கஷ்டம்? மாசி: மண்டலத்தின் புகழ் பரவும்; மார்க்கம் தழைக் (மன்னன் புன்னகை புரிகிறான். 'சரி' என்று மன் னன் ஜாடை காட்ட, அமைச்சரும் மாசிலா மணியும் புறப்படுகிறார்கள். மாசிலாமணி கோப்பையைக் கீழே வைக்க, அமைச்சர்...] அமை: பருகவில்லையோ பழரசம்? மாசி: இல்லை. பூச்சி விழுந்து விட்டது. (இருவரும் போகின்றனர். மன்னன் வேறு பக்கம் உள்ளே செல்கிறான். பணியாள் பானக் கோப் பையில் கிடந்த பூச்சியை எடுத்து எறிந்துவிட்டு யாரும் காணாதபோது பருகிவிட்டு..] பணி: பூச்சி புழு விழுந்தாத்தானே. நமக்குக் கிடைக் குது, இந்தப் பானமெல்லாம்! பூச்சி புழுக்களே. வாழ்க. . வாழ்க... காட்சி-33 இடம்: வெற்றிவேலனின் கொலுமண்டபம் இருப்: வெற்றிவேலன், மதிவாணன், அமை சர், பணியாட்கள். நிலைமை: பிரமுகர்களும் அமைச்சர்களும் உள்ளனர். மதிவாணன் மூக