உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 73 திலகா: எவ்வளவு குறும்பு! மாளிகையிலே சிறைவாசம்! அதுதான் தண்டனையா? முத்து: திவகா! இந்தத் தேன்மொழி கேளாமல் நான் அங்கே தீயிலே விழுந்து தவிக்கிறேன். திலகர் : இன்பமே! ஆமாம். ஒவ்வொரு நாளும் என் நினைவு வருமா உங்களுக்கு? (முத்து அவள் கரத்தைக் கையிலெடுத்துக் கண் களில் ஒற்றிக் கொண்டு...] முத்து: ஒவ்வொரு விநாடியும். திலகா : இது முழுப் பொய். நான் நம்பவே மாட்டேன் முத்து: நெஞ்சிலே நிறைந்து இருக்கிறாய் திலகா. திலகா: வேறு யாருடைய அழகும் உம்மை மயக்க வில்லை? உண்மையைச் சொல்ல வேண்டும். முத்து: என் இதயத்திலே யாரும் புக முடியாது.- இடம் ஏது? உன் மாளிகையாகி விட்டதே என் மனம் திலகா : (நெகிழ்ச்சியுடன்) நான் இனி மயக்கமடை வேன் துரையே! முத்து: திலகா! அண்ணா என்னதான் சொல்லுகிறார்? திருமண நாள் குறிக்க ஏன் இன்னும் தயக்கம்? திலகா: சபதம் ஒன்று நிறைவேற வேண்டும் றார் அண்ணா. என்கி முத்து: சபதம்! பாழாய்ப்போன சபதம். எப்போது நிறைவேறுவது? என் சஞ்சலம் எப்போது தீருவது? நிலவின் அழகைக் காண, அண்ணாந்து பார்க்கப் பார்க்க, ஒரு மேகத் திலிருந்து மற்றோர் மேகத்திலே நுழைந்துவிடுகிறதே, நிலவு அதுபோல இருக்கிறதே நிலைமை. என்னால் தாங்க முடி யாது திலகா! [அவன் மீது சாய்ந்து கொண்டிருக்கும் திலகா குறும்பாக...]