பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.5

பூகோளமாய் விளங்கி முல்லை நிலமாய் நகைத்தீர்கள்: கணிதமாயிருந்து வகுப்பன வகுத்து, கழிப்பன கழித்தீர்கள்!

கூட்டுவதைக் கூட்டி பெருக்குவதைப் பெருக்குனிர்கள்: சரித்திரமாய் இருந்து சமாதானத்தை நிலை நாட்டி பொற்காலத்தை உருவாக்குபவருக்குப் பெயர்-அறிஞர் அண்ணு!

விஞ்ஞானமாய் விளங்கி, புதியன கண்டு பிடித்து ஈந்து எமை புதியதோர் குடிமக்களாக்க இருக்கும் வித்தகர்.அண்ணு! மைேதத்துவமாய் திகழ்ந்து எமது மனக்குறைகளை மன்னிக்கும் மாமேதையின் நாமம் அண்ணு:

தத்துவமாய் எமை உருவமாக்கி மோன நிலையிலே ஆழ்த்தும் அறிஞர்க்கறிஞரது பெயர் அண்ணு!

அண்ணலே! தென்னகத்து மன்னவனே! தங்கள் பெருமையை கிழக்காசிய நாடுகள் உணர்ந்துவிட்டன!

உலக நாடுகள் அனைத்தும் உணரும் நாள் என்ருே, அன்றுதான் எமக்கு பிறவியின் புனித நாள்!

அதனுல் நாங்கள் தங்களுடன் ஐக்கியமாகிவிட்டோம்” தமிழ் மாலை சூடி தங்களைக் காண்கிருேம் பூரிக்கிருேம் பெருமையுறுகிருேம்;

'அறுபத்தேழு பற்றி நீங்கள் ஆற்றிய கருத்துகளை அகத்திலே இருத்திக் கொண்டோம்:

கருமமே கண்ணுவோம்’ காங்கிரசை அரியனையிலே யிருந்து இறக்குவதே எமது பணி.

அந்த பணியை இன்று முதல் தங்கள் காலடிக்குக் காணிக்கையாக்கிக் களிக்கிருேம்:

இந்த சபதத்தை இமை மூடினும் மறவோம்! மறவோம்:

१° 智

7 سنویه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/106&oldid=564550" இலிருந்து மீள்விக்கப்பட்டது