34
என் ஊதா மேனியைப் பார் ! நான் மாயையா ? தொட்டுப் பார்த்துக் கூறு.
அவாவைப் பற்றிக் கதைகளை அளந்தவனே, ஒழித்தாயா நீ அவாவை ?
- - 冷 ६ * - $. அவாவை அழித்தான் சித்தார்த்தான். அவன * புத்த ஞன கதை தெரியுமா உனக்கு ?
காலையில் ஒருநாள் கபிலவாஸ்துச் சோலையிலே அவன் மன்னனுக இருந்தபோது வந்தான்.
மாலையிலே நான் காம்பொடித்து செடிக்குக்கீழே விழுந்து கிடந்தேன்.
கண்டான் காவலன்! மருண்டான் எனப் பார்த்து. சிந்தனை வளையம் சுழன்றது அவனுக்கு.
வாடிய மலருக்கு வாழ்வென்பது எது ? வதங்குமா மலர்? சிந்தித்தான் சித்தார்த்தன். முடிவு காண முனைந்தான். போதி’யின் கீழே அமர்ந்தான். புத்தொளி' பிறந்தது. ஞானம் படர்ந்தது.
ஆசையின் அழுக்கு இழுக்குகள் அவனுக்குத் தெளிவாகத், தெரிந்தன.
சித்தார்த்தன் புத்தளுைன் ! நான் மலர் : உயிரில் மிகச் சிறிய உயிர் !
கபிலவாஸ்துவின் காவலனெங்கே ? கருகிய மலரான நானெங்கே ?
முடிவென்ன தெரியுமா? ஒரு மலர், மன்னன் மனதையே மாற்றி விட்டது.
மாயை மனதை மாற்றுமா ? தெளிவைக் கொடுக்குமா? சித்தார்த்தனிடம் செல்வானேன். தென்னகத்தின் பேரறிஞரைக் கவனி.
அமைதிக்கு அடைக்கலம் தந்து அரசியலுக்குப் புத்துருவம் அளித்தவர். - -