பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

என் ஊதா மேனியைப் பார் ! நான் மாயையா ? தொட்டுப் பார்த்துக் கூறு.

அவாவைப் பற்றிக் கதைகளை அளந்தவனே, ஒழித்தாயா நீ அவாவை ?

- - 冷 ६ * - $. அவாவை அழித்தான் சித்தார்த்தான். அவன * புத்த ஞன கதை தெரியுமா உனக்கு ?

காலையில் ஒருநாள் கபிலவாஸ்துச் சோலையிலே அவன் மன்னனுக இருந்தபோது வந்தான்.

மாலையிலே நான் காம்பொடித்து செடிக்குக்கீழே விழுந்து கிடந்தேன்.

கண்டான் காவலன்! மருண்டான் எனப் பார்த்து. சிந்தனை வளையம் சுழன்றது அவனுக்கு.

வாடிய மலருக்கு வாழ்வென்பது எது ? வதங்குமா மலர்? சிந்தித்தான் சித்தார்த்தன். முடிவு காண முனைந்தான். போதி’யின் கீழே அமர்ந்தான். புத்தொளி' பிறந்தது. ஞானம் படர்ந்தது.

ஆசையின் அழுக்கு இழுக்குகள் அவனுக்குத் தெளிவாகத், தெரிந்தன.

சித்தார்த்தன் புத்தளுைன் ! நான் மலர் : உயிரில் மிகச் சிறிய உயிர் !

கபிலவாஸ்துவின் காவலனெங்கே ? கருகிய மலரான நானெங்கே ?

முடிவென்ன தெரியுமா? ஒரு மலர், மன்னன் மனதையே மாற்றி விட்டது.

மாயை மனதை மாற்றுமா ? தெளிவைக் கொடுக்குமா? சித்தார்த்தனிடம் செல்வானேன். தென்னகத்தின் பேரறிஞரைக் கவனி.

அமைதிக்கு அடைக்கலம் தந்து அரசியலுக்குப் புத்துருவம் அளித்தவர். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/35&oldid=564479" இலிருந்து மீள்விக்கப்பட்டது