உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய 138 இந்த மன்றத்தில் நாடு விடுதலையடைய வேண்டிய அவசியத்தை எடுத்து நான் சொன்ன நேரங்களில் எல்லாம், இந்தப் பெரியவர் மன்றத்துக்கு வெளியே நின்று என்னை இழித்துரைத்து, 'ஏடா! மூடா! வாய்ப் பேச்சால், வரப்போகும் ஆபத்தை எடுத்துரைத்து விடுவதால் நாடு கிடைத்துவிடுமா? இதோபார் என் திட்டத்தை -கொடியைப் பொசுக்கு வேன் - கோட்டையைப் பொடிசெய்வேன் !” - என் றெல்லாம் திட்டங்கள் தீட்டியவர். இந்த ஆட்சி பீடத்தின் அபூர்வ ராஜதந்திரத் தாலும், மிரட்டல்களாலும் இப்போது அவர் உங்கள் பக்கம் சாய்ந்து விட்டார். அதோடு விடுதலைப் போராட்டத்தின் புனிதத் தன்மையையும் இகழ்ந் துரைக்கும் தன்மையையும் பெற்றுவிட்டார். விடு தலைப் போரில் ஈடுபட்டுள்ள என்போன்ற வீரர்களை யும் காட்டிக் கொடுக்கும் அரிய காரியத்தை அட்டி யின்றிச் செய்து முடிக்கவும் கற்றுவிட்டார். அவர் தயாரித்த படை, என் தலைமைக்குப் பணிகிறதோ இல்லையோ - என் போராட்டத்தை ஊக்குவிக்க வேண்டுமென்ற ஆசையில் எனக்கு உறு துணையாக ஓடிவந்து விட்ட.து படை என்பக்கம்!- படை தயாரித்தவரோ, பகைவர்களாகிய உங்கள் பக்கம் ! இது நான் முன்பே எதிர்பார்த்தது தான். என்னை அழிக்க அவர் உங்கள் பக்கம் சேர்வார் என எண்ணியதுண்டு; ஆனால், மண்ணையே உங்களுக்கு நிரந்தர அடிமையாக்க அவர் நெஞ்சு எப்படித்தான் துணிந்ததோ! - யானறியேன். D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/138&oldid=1703687" இலிருந்து மீள்விக்கப்பட்டது