உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதவிதேடும் காமராசர் அன்புள்ள தலைவர் அவர்களே ! பெரியோர் களே! தாய்மார்களே! தோழர்களே! இன்றையீ தினம நம்முடைய சட்டசபை உறுப்பினரான தோழர் ஆசைத்தம்பி அவர்களையும்; என்னுடைய குளித் தலைத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற என்னையும் பாராட்டுவதற்காக நடைபெறும் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள எனக்கும் வாய்ப்பளித்தமைக்கு நான் மிக மிக மகிழ்ச்சியடை கிறேன். நான் என் இத்தொகுதியை " நம்முடைய தொகுதி என்று குறிப்பிடுகிறேன் என்றால். இந்த ஆயிரம் விளக்குத் தொகுதியில் வெற்றிபெற்ற தோழர். ஆசைத்தம்பி அவர்களுக்கு விழுந்த வோட்டு களில் என்னுடைய வீட்டு வோட்டுகளும் நான் கைந்து இருந்திருக்கின்றன, என்பதால் தான். ஆயிரம் விளக்குத் தொகுதி வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயரும் பதிவாகியிருக்கின்ற காரணத்தால், அவர் எனக்கும் எம் எல். ஏ. ஆன படியால் வாக்காளர் என்ற நிலையில் நின்று நான் அவரைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். தோழர். ஆசைத்தம்பி அவர்கள், இந்தத் தொகுதி மக்களுக்கு ஆற்ற இருக்கும் தொண்டுகள் பெருகி, அவர் என்றென்றும் இந்தத் தொகுதியின் எம். எல்.ஏ. வாகவே இருக்க வேண்டுமென்று நான் பெரிதும் விரும்புகிறேன். நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பல இடங்களில் போட்டியிட்டு பதினைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/61&oldid=1703248" இலிருந்து மீள்விக்கப்பட்டது