உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 திருக்கிறோம்; ஒரு சீட்டுத்தான் கிடைக்கட்டுமே! அந்தச் சீட்டு காமராசரைக் கதிகலங்கச் செய்யும் துருப்புச் சீட்டாக இருக்கும்" என்று! அந்த முறை யில்தான் நாம் பதினைந்து இடங்களைப் பெறும் நல்ல சூழ்நிலையைத் திராவிடப் பெருங்குடி மக்கள் ஏற் படுத்தினார்கள். பலப்பல எதிர்ப்புக்கு மிடையே- சூறாவளி எதிர்ப்புப் பிராசார எதிர்ப்புக்கு மிடையே- பண வெள்ளத்திற்கு மிடையே-படை பலத்திற்கு மிடையே-நமக்கு அபரிமிதமான வெற்றியை அளித் திருக்கிறார்கள். சு நாம் தேர்தலில் ஈடுபட்ட நேரத்தில் நம்மை ஆளுங் கட்சியாகிய காங்கிரசு மட்டுமா எதிர்த்தது? கம்யூனிஸ்டுகள் கச்சை கட்டிக்கொண்டு 'காங்கிரசு வென்றாலும் பரவாயில்லை; திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க் கட்சியாக அமர்வதற்கு விடக்கூடாது” என்ற காரணத்தால் பலமான எதிர்ப்பை-தாக்குதலை பத்திரிகை மூலமும் - பிரச்சாரம் மூலமும், சில இடங் களில் செயல் மூலமும் செய்து காட்டினார்கள். சோஷலிஸ்டுக் கட்சியினர் எந்தெந்த முறையில் நமக்குத் தீங்கிழைக்க முடியுமோ, அந்தந்த விதங் களில் எல்லாம் நமக்குத் தொல்லை தந்தனர்; பிரஜா சோஷலிஸ்ட் கட்சியினர் எப்படியெல்லாம் நம்மோடு ஒத்துழையாமை இயக்கம் நடத்த முடியுமோ அப்படி யெல்லாம் இன்னல், அல்லல்களைத் தந்தார்கள். தமிழரசுக் கழகத்தினர் இப்படியும். அப்படியும் பேசி, எப்படியும் நம்மை ஒழித்துவிட வேண்டும் என்பதற் காக மட்டுமே போராடி வந்தார்கள். இவர்களுக்கு எல்லாம் ஒருபடி உயர்வாக, நம்முடைய அரும்பெருந் தலைவர் பெரியார் இராமசாமி அவர்களும், அவர் ம க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/63&oldid=1703250" இலிருந்து மீள்விக்கப்பட்டது