உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 68 சென்று விட்டோம் ஆகவே எங்கள் சரித்திரம் முற் றும் என்று அந்தப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு விடப் போவதில்லை அத்தகைய சட்டமன்றப் பிர வேசம், எங்களுடைய வரலாற்றில் விடுதலைச் சரித் திரத்தில் பத்தாவது பக்கமாக, அல்லது பதினைந்தா வது ஏடாகத்தானிருக்கமுடியுமே தவிர, இரண்டாவது அத்தியாயமாக - அல்லது மூன்றாவது அத்தியாய மாகத் தான் இருக்க முடியுமே தவிர, முழுமை யடைந்த சரித்திரமல்ல இது ! முழுமையடையும் சரித்திரம் வெறும் மையினால் எழுதப்படுமோ ? அல் லது ரத்தத்தால் எழுதப்படுமோ? மயில் இறகால் எழுதப்படுமோ? அல்லது எங்களுடைய எலும்புகளை எடுத்து அதை ரத்தத்திலே தோய்த்து எழுத வேண்டுமோ எங்களுக்குத் தெரியாது. 1 ஆனால். அவைகளுக்கும் தயாராகத்தான் எத்தகைய புரட்சிகளையும், அடக்குமுறைகளையும், வேதனைகளையும், சமாளித்துத் திராவிடநாடு பெறு வதற்குத்தான் - தாய்த்திரு நாட்டை மீட்பதற்காகத் தான் - இன்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற விடுதலை அணிவகுப்பு நடைபோடு கிறதே தவிர, ஏதோ சட்டமன்றத்திற்குச் சென்று அவர்கள் தருகிற நூற்றைம்பது வெண்பொற் காசு களைக் கொண்டு கொண்டு "ஆகா! எவ்வளவு அழகான பணங் கள்! வாழ்நாளிலேயே கண்டது கிடையாதே!" என்று ஏங்கி புளகாங்கிதம் அடைந்து, சட்ட சபையிலே சுழன்று கொண்டிருக்கிற அழகான மின் சார விசிறிகளுக்கு இடையே, பட்டு மெத்தைகளுக்கு, இடையே சுகங்காண அல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/89&oldid=1703274" இலிருந்து மீள்விக்கப்பட்டது