பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். "ஸ்ரீகோவிராஜகேலரிவந்மரான ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது இராஜேந்திர சிங்கவள நாட்டு மண்ணிநாட்டு வ, ஹெயொ வேம்பற்றூராகிய சோழமார்த்தாண்ட வதுவெ-ஹி மங்கலத்து 8ஹாவெெவயொம் கையெழுத்து நம்முடைய சக்கிர வர்த்தி உடையார் ஸ்ரீ ராஜராஜவெவர் இவ்வூர் திருவிசலூர்ஹோலெ வர் ஸ்ரீ கோயிலிலே துலாபாரம் புக்கருளின அன்று நம்பிராட்டியார் தந்திசக்திவிடங்கியார் இரண) மவ-ம் புக்கருளி இத்திருவிசலூர் ஹோவெவர்க்கு அக்காரடலை அமுதுக்கு வேண்டும் நிவந்தங்களுக்காக வைச்ச காசு சாதிய அ." இவ்வரசன் பட்டமகிஷியரில் ஒருவராகிய திரைலோக்கியமா தேவியார் திருவையாற்றில் இப்போது உத்தாகைலாசமென்று பெயர் பெறும் லோகமகாதேவீசுரம் கட்டுவித்தாள். சோழவம்சத்தார்களோ மிகுந்த சிவபக்தர்கள். அவர்களிலும் இவ்வரசனும் இவன் மனைவியரும் மக்களும் பெருத்த சைவாபிமானிகள். இராஜராஜன் தன் காலத் துள்ள கோயில்களிலெல்லாம் மிகச் சிறந்ததாயிருக்கவேண்டுமென்று கருதி, இற்றைக்கும் கண்டோர் வியக்கும்படியான, பிரஹதீசுரமென்னப் பட்ட இராஜராஜேசுவராலயம் கட்டினான். இதனைப்புகழ்ந்து இவ் வாசன் காலத்தாராகிய கரூவூர்த்தேவர் தந் திருவிசைப்பாவில் ஒரு பதிகம்பாடி யிருக்கிறார். இக்கோயிலுக்கு இவனும் இவன் உறவினரும் கொடுத்த பொன்னும் மணியும் முத்தும் நிலங்களும் அளவற்றன. இவன் பெருமையை விளக்க இராஜராஜேசுவர நாடகமொன்று இயற்றி ஆண்ேேதாறும் நடிக்கப்பட்டு வந்தது..' இவ்வரசன் கல்விமான்களிடத்தில் மிக்கபற்றுடையவன். இவன் காலத்திற்றான் நம்பியாண்டார் நம்பிகளும், கண்டராதித்ததேவர் முதலிய திருவிசைப்பாவுடையாரும் பிறருமிருந்தனர். திருமுறை கண்ட சோழனும் இவனே | - S1.1., Vol. II, p. 306. “மல்லன்மிகு சேனையுட னிராசராச மன்னவனு மக்ககரில் வந்து சேர்ந்தான்" (திருமுறைகண்டபுராணம். பா, 6) திருவிசைப்பாவுடையரான கண்டாதித்தரேலரை முதலாம் கண்டராதித்தாகச் சொல்வது வழக்கம். (செந்தமிழ்த் தொகுதி 8. பக் 290; S. I. I, Vol I, p. 144). அவர் இசாஜ மாமன் பாட்டனுக்குத் தமையனானதால், இசாஜராஜனால் கட்டப்பட்ட இராஜ ராஜேசுவரம் பாடியிருக்க ஏலாது. ஆதலால் திருவிசைப்பாவுடை யார், அவர் யானும் மழராந்தகன் மகனுமாகிய இரண்டால் கண்டராதித்தரேயாவர். ரே, தங்காலத்தே திருவல்லம் கோயிலின் அக்கிரமங்களை விசாரித்தவர். ST I) |