பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிச்சரித்திரச்சுருக்கம். வரையும் பிராணாந்திகம் வாரியத்துக்குக் குடவோலை எழுதிப்புகவிடப் பொததாகவும். "ஆக இச்சுட்டப்பட்ட * இத்தனை வரையும் நீக்கி இம்முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பெயர் தீட்டி இப்பன்னிரண்டுசேரியிலுமாக இக்குடும்பும் வெவ்வேறே வாயோலைபூட்டி முப்பது குடும்பும் வெவ்வேறே கட்டிக்குடம்புக இடுவதாகவும். குடவோலை பிறிக்கும்போது மகாசபை த்திருவடியாரை ஸபாலவிருத்தம் நிரம்பக்கூட்டிக்கொண்டு அன்றுள் ளூரில் இருந்த நம்பிமார் ஒருவரையும் ஒழியாமே மகாசபையிலே ஊர் மண்டகத்திலே இருத்திக்கொண்டு அந்நம்பிமார் நடுவே அக்குடத்தை நம்பிமாரில் விருத்தராயிருப்பாரொரு நம்பிமேல் நோக்கி எல்லாஜனமும் காணுமாற்றால் (1) எடுத்துக்கொண்டு நிற்க பகலே யந்தாமறியாதான் ஒரு பாலகனைக்கொண்டு ஒருகுடும்புவாங்கி மற்றொருகுடத்துக்கே புக விட்டுக் குலைத்து, அக்குடத்தில்லோரோலைவாங்கி மத்தியஸ்தன் கையி லே குடுப்பதாகவும். அக்குடுத்தவோலை மத்தியஸ்தன் வாங்கும்போது அஞ்சவிரலும் அகலவைத்து உள்ளங்கையிலே எற்றுக்கொள்வானாகவும். t அவ்வேற்றுவாங்கின ஓலை வாசிப்பானாகவும். வாசித்த அவ்வோலை அங்குள மண்டகத்திருந்த நம்பிமார் எல் லாரும் வாசிப்பாராகவும். 1 வாசித்த அப்பெயர் தீட்டுவதாகவும். இப்பரிசே முப்பது குடும்பிலும் ஓசோர்பெயர் கொள்வதாகவும். இக் கொண்ட முப்பது பெயரிலும் தோட்டவாரியமும் ஏரிவாரியமும் செய்தாரையும் வித்தியாவிருத்தரையும் வயோவிருத்தர்களையும் சம்வத் சா வாரியாகக்கொள்வதாகவும். மிக்குநின்றாருள் பன்னிருவரைத்

  • எப்படிக் குடவோலைபரிப்பது என்பதை வர்ணிக்கிறது.

(1) குடத்தில் முன்னரே சள்ளத்தனமாய்ப் போட்டுவைத்திருக்கும் இலைகளுண்டோவென்னும் ஐயநீங்க இச் சாக்கிரதை. சையில் மற்றோர் பெயர்பொறித்த ஒரு சிறு ஓலையை ஒளிந்திருந்தால் அது வெளிப்படும்படிக்கான ஜாக்கிரதை. 1 மத்தியஸ்தன் ஏற்றுக்கொண்ட ஓலையிலுள்ள பெயரைவாசிக்காமல் தனக்கு வேண்டியவன் பெயரை வாசிப்பான் என்னும் சர்தேகத்தை நீக்கும் பொருட்டு இசசாக்கிரதை.

  • முப்பது பெயர்கள் எவ்வாறு பிரிக்கப்படுகிறார்கள் என்பதை விவரிக் பிறது!