பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

ஸ்ால்பிய உஸ்பெகிஸ்தான்

(13. 1915)

முடிவற்று அலைந்திடும் உள்ளம்

நிலத்துாடும், கடலூடும், வானுாடும் பயணங்கள்

நிகழ்த்து கின்றேன்; -

பலவான சிற்றுார்கள், நகரங்கள், நாடெல்லர்ம்

பறந்தும் உள்ளேன்;

நிலவுலகம் பலவண்ணத் திண்டாகப் புதிர்வழியாய்க்

கிடக்கும், எங்கும்

கலத்துறைகள் வாழ்மனைகள், எண்ணங்கள், கனவார்வம்

பொலிந்து நிற்கும்.

எங்கெங்கு நான்செலினும் கனவோடே உடன்கொள்வேன்

பாட்டை, அன்பை .

இங்கிந்த உலகந்தான் ஒய்வில்லாது இயங்குதல்போல்

இயங்கு கின்றேன்.

கங்குல்துயில் கனவினிலும் என்பயணம் மேன்மேலும்

தொடர்ந்தே செல்லும்,

செங்கதிர்ப்புத் தொளிநோக்கிச் செல்கின்ற நாவாய்என்

படுக்கை ஆகும்.

252