பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டற்று இயங்குவேன்; வெளியெலாம் திரிகுவேன். என்தலை உடுக்களின் அரங்கில் திகழ்ந்திடும். எல்லார்க்கும் ஒளிசெயும் இந்த ஞாயிறு ...எனக்கொரு விளக்காம்! விளக்கு இல்லாமல் எதுவும் முடியுமா? ஒவ்வொரு காலையும் வேலைக்கு ஏகுமுன் மலைக்குப் பின்னால் மறைந்திருக் கும்.அந்த ஞாயிற்று விளக்கை நான்தான் வெளியில் எடுத்து வைக்கின் றேனே.

62